Latest Updates
-
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
உங்கள் துணையின் கையைப் பார்த்தே, அவங்க உங்கள ஏமாத்துறாங்களா இல்லையான்னு தெரிஞ்சுக்கலாம்!
இங்கு கை ரேகைகளைக் கொண்டு ஒருவரது மோகத்தன்மையை எப்படி அறிவது என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து உங்கள் துணை எப்பேற்பட்டவர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஒருவருக்கு காதல் ஒருமுறை தான் பூக்கும் என்பதெல்லாம் வெறும் பொய். சிலருக்கு காதல் பலமுறை பூக்கும். ஆனால் பலரும் அதை வெளிப்படையாக சொல்லிக் கொள்வதில்லை. கைரேகை ஜோதிடத்தின் படி, பலமுறை காதல் மலர்ந்தவர்களை எளிதில் கண்டறிய முடியும்.

நம் கையில் உள்ள சில ரேகைகள் ஒருவரது மோகத்தன்மை அல்லது கடலைப்போடும் குணத்தை வெளிக்காட்டும். கைரேகை ஜோதிடர்கள், ஒருவரது கை ரேகைகளைப் பார்த்தே இறந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலத்தில் நடக்கப் போவதைக் கணித்துக் கூறுவார்கள். இப்படி கூறுகையில், சிலருக்கு நடக்காமல் இருந்தாலும், பலருக்கும் நடந்திருக்கும்.
இக்கட்டுரையில் கை ரேகைகளைக் கொண்டு ஒருவரது மோகத்தன்மையை எப்படி அறிவது என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து உங்கள் துணை எப்பேற்பட்டவர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

அறிகுறி #1
ஒருவரது கையில் உள்ள சுக்கிர மேட்டில் வலைப்பின்னல் போன்று அளவுக்கு அதிகமான ரேகைகள் இருந்தால், அத்தகையவர்கள் மற்றவர்களுடன் அளவுக்கு அதிகமாக கடலைப் போடக்கூடியவர்கள். அதாவது அத்தகையவர்களிடம் மோகத்தன்மை சற்று அதிகம் இருக்குமாம்.

அறிகுறி #2
கையில் உள்ள சுக்கிர மேட்டில் மச்சம் இருந்தால், அத்தகையவர்கள் தன் காதல் வாழ்க்கையை வெளிப்படையாக சொல்லாமல் மறைப்பார்களாம்.

அறிகுறி #3
இரண்டு கைகளிலும் உள்ள இதய ரேகைகள் செயின் போன்று பிணைந்திருந்தால், அவர்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் மற்றும் அத்தகையவர்களுக்கு நிறைய காதல் இருக்க வாய்ப்புள்ளதாம்.

அறிகுறி #4
சுண்டு விரலின் அடிப்பகுதிக்கும், இதய ரேகைக்கும் இடையே ஒன்றிற்கு மேற்பட்ட கோடுகள் இருந்தால், அத்தகையவர்களுக்கும் நிறைய காதல் மலர்ந்திருக்க வாய்ப்புள்ளதாம்.

அறிகுறி #5
சந்திர மேட்டில் இருந்து இரண்டு தலைவிதி ரேகைகள் ஆரம்பமானால், அத்தகையவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு உறவுகளை பிரச்சனைகளின்றி சமாளிக்கக்கூடியவர்களாம்.

அறிகுறி #6
சுண்டு விரலுக்கு கீழே மற்றும் இதய ரேகைக்கு மேலே நான்கு நீளமான மற்றும் மெல்லிய திருமண ரேகைகள் இருந்தால், அத்தகையவர்கள் மிகவும் ரொமான்டிக்கானவர்களாக இருப்பார்களாம்.



Click it and Unblock the Notifications