Latest Updates
-
இன்றைய ராசிபலன் 15 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்கப்போகுதாம்...! -
வார ராசிபலன் (15 March 2026-21 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை டபுளாக உயரும்.. -
வெயிலால் முகம் கருமை ஆகக்கூடாதா? அப்ப கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க... -
வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. குளுகுளு-ன்னு சூப்பரான குச்சி ஐஸ் செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க.. -
பங்குனி மாத ராசி பலன் 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க...
உங்கள் உறவுக்கு வேட்டு வைக்கிறதா தொழில்நுட்பம்? அதிர்ச்சியான தகவல்கள்!!!
வாட்ஸ்-அப், ஃபேஸ் புக், வீடியோ காலிங், டேட்டிங், சாட்டிங் என்று தொட்டதற்கு எல்லாம் செயலிலி (App) வாயுலாக ஊடுறவி உறவாடும் வகையாக கலாச்சாரம் மருவிவிட்டது. இதன் காரணமாக உறவுகள் சீக்கிரம் ஒட்டிக்கொள்வதை போல, வெகு விரைவாக பிரிந்தும் விடுகின்றன.
ஒரே இடத்துல புருஷனும், பொண்டாட்டியும் வேலை பண்ணா இவ்வளோ பிரச்சனை வருமா என்ன?!!
இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது நேரடி உணர்வின் பிரதிபலிப்பு இல்லாததுதான். சாட்டிங்கில் நீங்கள் அனுப்பும் செய்து எழுத்தாக தான் வெளிப்படுமே தவிர உணர்வாக வெளிப்படாது. நீங்கள் விளையாட்டாக அனுப்பும் செய்து வினையாக மாறும். சீரியசாக கூறும் செய்தி விளையாட்டாக எடுத்துக் கொள்ளப்படும்.
பிரிந்த காதல் துணையுடன் மீண்டும் சேர்வது சரியா, தவறா?
முகபுத்தகத்தில் பதிவேற்றம், வாட்ஸ்-அப் ஸ்டேடஸ் என அனைத்தும் உறவை இறுக்கவும், முறிக்கவும் காரணமாக திகழ்கிறது. பெரும்பாலும் முறித்து எறிந்துவிடுகிறது என்பது தான் உண்மை.

தவறான புரிதல்...
முன்பு கூறியவாறு, செய்திகள் அனுப்புவம் முறை தான் இந்த தவறான புரிதல்களை ஏற்படுத்துகிறது. இதற்கு காரணம் நாம் எந்த பாணியில், தொனியில் செய்தியினை அனுப்புகிறோம் என்பதை எதிர்முனையில் செய்தியை பெறுபவருக்கு தெரியாமல் இருப்பதே ஆகும்.

நேரமின்மை
போதிய நேரம், ஒருவரோடு ஒருவர் செலவழிப்பது இல்லை என்பது முக்கியமான காரணம் ஆகும். என்னதான், பல மணி நேரம் மொபைலில் பேசினாலும், செய்திகள் அனுப்பினாலும் நேருக்கு நேர் முகம் பார்த்து பேசுவதை போல இருப்பதில்லை.

அந்நியன் போன்ற வாழ்க்கை
பல சமயங்களில் ஒன்றாக இருப்பினும் கூட, ஒருவரை ஒருவர் முக பார்த்து பேசாது, சமூக வலைத்தளங்களில் மூழ்கி இருப்பது உறவினை பெருமளவு பாதிக்கிறது. ஒரே வீட்டில், ஒரே அறையில், அருகருகே இருந்தும் கூட சிலர் ஃபேஸ் புக் மோகத்தில் சரியாக முகம் கொடுத்து பேசாமல் இருப்பது, உறவினுள் விரிசல் ஏற்பட காரணமாக இருக்கின்றனது என்பது தான் அதிர்ச்சியான தகவல்.

சண்டைகள்...
முகப்புத்தகத்தில் போடும் பதிவுகளில் இருந்து, கருத்து, விருப்பம் என பல விஷயங்களினால் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. உதாரணமாக, வேறொரு பெண்ணின் புகைப்படத்திற்கோ, பதிவேற்றதிற்கோ கருத்துகள் தெரிவிப்பது, பகிர்வது போன்றவை கூட உறவில் விரிசல் ஏற்பட, சின்ன சின்ன சண்டைகளை பெரிதாக்க காரணமாக இருக்கின்றது.

உணர்வுகள் வலுவிழப்பு
இதன் காரணங்களால் உணர்வுகள் குறைந்துக் போய்விடுகிறது. உறவுகள் பிரிய பெரும் காரணமாகிவிடுகிறது. புன்னகை, அழுகை, ஆச்சரியம், பூரிப்பு என எந்த ஒரு உணர்வும் முழுமையாக உறவுகளுக்கும் எழுவதை தடுக்கும் தடையாகிவிட்டது தொழிநுட்பம்.

தூரம் அதிகரிக்கிறது
நாளுக்கு நாள் தொழிநுட்பம் வளர்ச்சியடைவதன் அதே அளவு உறவுகளுக்குள்ளான இடைவேளை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. காதலன், காதலி மட்டுமல்லாமல், தாய், தந்தை, அண்ணன், தங்கை போன்ற உறவுகளையும் கூடப் பாதிக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications











