Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
பெண்களிடம் ஆண்கள் அப்பாவித்தனமாக மன்னிப்பு கேட்கும் முறைகள்!!
தனது காதல் துணையை பார்க்க செல்லும் போது குறைந்தபட்சம் பவுடராவது பூசாமல் பெண்களாலும், ஓரிரு பொய்களாவது பேசாமல் ஆண்களாலும் இருக்கவே முடியாது. சின்ன சண்டைகள் தான் காதலை வளர்க்கும். அந்த சண்டைகளுக்கு காரணம் சில பொய்கள் தான். துரோகம் விளைவிக்கும் அளவு பொய்கள் கூறுவது தவறு. ஆனால், அன்றாடம் காதலில் கெஞ்சும் தருணங்களும், கொஞ்சும் தருணங்களும் நிகழ சிறு சிறு பொய்கள் கூறுவது தவறே இல்லை.
காதலில் பெண்கள் கூறும் பொய்யானது அவர்கள் காலையில் பூசும் கண்மை போன்றது, மாலைக்குள் அழிந்துவிடும், ஆண்கள் கண்டறிந்துவிடுவார்கள். பொய்கள் பேசும் பொய்யானது தலைக்கேறிய மப்பு போல மறுநாள் விடிந்ததும், தாங்கள் என்ன பொய் கூறினோம் என்று ஆண்களே மறந்துவிடுவார்கள். இதுதான் ஆண்கள் கூறும் பொய்க்கும், பெண்கள் கூறும் பொய்க்கும் இடையே இருக்கும் வித்தியாசம்...

அய்யோ மறந்துட்டேன்!!!
பெரும்பாலான ஆண்களுக்கு காதலில் மட்டும் ஞாபக மறதி ஏற்படுவது இயல்பு. எப்போதோ நடந்த கிரிக்கெட் ஸ்கோரை எல்லாம் நினைவில் வைத்திருக்கும் ஆண்கள் கூட காதலி ஏதாவது கூறினால் மறந்துவிடுவார்கள்.

கொஞ்சம் வர்க் ஜாஸ்தி ஆயிடுச்சு!!
தன் ஆண் நண்பர்களுடன் அரட்டையடித்துக் கொண்டு காதலியை மறந்துவிடும் ஒவ்வொரு ஆணும் கூறும் ஒரே பொய், "கொஞ்சம் வர்க் ஜாஸ்தி ஆயிடுச்சு!!"

மீட்டிங்ல இருந்தேன் அதான் கால் எடுக்க முடியல!!
சரக்கு பார்ட்டி, அலுவலக தோழிக்கு உதவிக் கொண்டிருக்கும் போது, தம்மடித்துக் கொண்டிருக்கும் போதென, பல சூழல்களில் காதலியின் அழைப்பை எடுக்க மறுக்கும் ஆண்கள் கூறும் பொய் இது. "மீட்டிங்ல இருந்தேன் அதான் கால் எடுக்க முடியல!!"

தூங்கலாமா!!!
நண்பர்களுடன் வெளியே செல்ல ப்ளான் போட்டிருக்கம் போது, அல்லது நண்பர்களை வீட்டுக்கு அழைத்திருக்கும் போது ஆண்கள் தங்கள் காதலியிடம், தூக்கம் வருகிறது, உடல் சோர்வாக இருக்கிறது என்று நிறைய பொய்களை அள்ளிவிடுவார்கள்.

செம டிராபிக்!!!
முதல் பொய்யுடன் மாற்றான் போல ஒட்டிக் கொண்டு வரும் பொய் இது. "அய்யோ மறந்துட்டேன், நான் கிளம்பிட்டேன், வர வழியில டிராபிக் ஜாஸ்தி அதான் லேட்". இந்த பொய்யை கூறாமல் நீங்கள் காதலித்து வருகிறீர்கள் எனில், உங்களுக்கு நீங்களே சபாஷ் போட்டுக் கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications











