Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
உடலுறவில் ஈடுபடும் போது பெண்களை தர்மசங்கடமாக உணர வைக்கும் செயல்கள்!!
உடலுறவில் ஈடுபடும் போது பெண்களை தர்மசங்கடமாக உணர வைக்கும் செயல்கள்!!
உடலுறவு என்பதை நம் முன்னோர்கள் கலைகளில் ஒன்றாக சேர்த்திருக்கிறார்கள். எண்ணற்ற நிலைகள், எல்லையற்ற இன்பம் என உடலுறவும் கூட முடிவற்ற ஒன்று தான். மிருகங்கள் கூட தங்களது இனவிருத்தி ஏற்படுத்த அந்தந்த காலத்தில் தான் உடலுறவில் அதிகம் ஈடுபட முயல்கிறது.
முதல் முறை உடலுறவு கொள்வதை பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!!!
ஆனால், ஆறாவது அறிவு முளைத்த ஒரே காரணத்தினால் தான் மனித இனம் மனதில் எண்ணம் உதிக்கும் போதெல்லாம், உடலில் ஆசை எட்டிப் பார்க்கும் போதெல்லாம் உடலுறவில் ஈடுபட துடிக்கிறான். இது உயிர்களின் மத்தியில் இயல்பு தான் எனினும், எதிர்பாலின ஒப்புதல் இன்றி ஈடுபடுவது தவறு.
அதிகாலையில் உடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மை தெரியுமா...?
மனைவியாகவே இருந்தாலும் கூட ஒப்புதல் இன்றி தீண்டுதல் தவறு தான். ஒப்புதலோடு உடலுறவில் ஈடுபடும் போதும் கூட சில நேரத்தில், சில செயல்பாடுகள் பெண்களை தர்மசங்கடமாகவும், சந்கோஜமாகவும் உணர வைக்கிறது.....
எப்போ எல்லாம் உடலுறவு வெச்சுக்கிறது நல்லதுன்னு உங்களுக்கு தெரியுமா?

மது அருந்துதல்
உடலுறவில் ஈடுபடும் போது மது அருந்திவிட்டு ஈடுபடுதல் பெண்களை தர்மசங்கடமாக உணர வைக்கிறது. அந்த வாடை அவர்களை மிகுந்த அசௌகையரிம் அடைய செய்கிறது.

கேமரா பயன்படுத்துதல்
இன்றைய வளர்ந்த தலைமுறை செய்யும் மிகப்பெரிய தவறு தங்களது அந்தரங்கத்தை கேமராவில் பதிவு செய்து வைப்பது. இந்த செயல் பெண்களை மிகவும் சந்கோஜமாகவும், தர்மசங்கடமான நிலைக்கும் ஆளாக்குகிறது.

கெட்ட சத்தமிடுவது
உடலுறவில் ஈடுபடும் போது பெண்கள் கேட்க விரும்பாத வண்ணம் சத்தமிடுவது, முனங்குவது அவர்களை ஒரு மாதிரியாக உணர வைக்கிறதாம்.

ப்ரூஸ்லீ போன்ற செயல்படுபவர்கள்
ப்ரூஸ்லீ உள்ள நுழைந்தாலே அடிக்க தொடங்கிவிடுவார். இது வேண்டாம் என்கிறார்கள் பெண்கள். உடலுறவு என்பது இருவரும் சேர்ந்து அனுபவிக்க வேண்டியது, ஒருவர் மட்டுமல்ல....

பழைய நினைவுகள்
இதற்கு ஆண்கள் பொறுப்பல்ல, பெண்களே தான். உடலுறவில் ஈடுபடும் போது நீங்கள் செய்யும் ஏதேனும் செய்கை அவர்களது முன்னாள் காதலனை நினைவுப் படுத்துவது அவர்களை சங்கோஜம் அடைய வைக்கிறது.

மிருகத்தனமான செயல்கள்
பெண்களின் உடலமைப்பு மிகவும் மென்மையானது. உடலுறவில் ஈடுபடும் போது சில சமயங்களில் ஆண்கள் மிருகத்தனமாக ஈடுபடுவது பெண்களை தர்மசங்கடமாக உணர வைக்கிறது.

வேறு வேலை செய்ய செல்வது
உடலுறவில் ஈடுப்பட்டு முடிந்தவுடன், டிவி, மொபைல், அல்லது லேப்டாப் என வேறு வேலைகளில் ஆண்கள் ஈடுபடுவது பெண்களை மனதளவில் பாதிப்படைய வைக்கிறது.

சிரிப்பது
அவர்களது உடல் நளினம் அல்லது வாகினை கேலி செய்து சிரிப்பது ஜோக் என நினைக்க வேண்டாம். இது அவர்களை மிகவும் புண்படுத்தும் செயலாக தான் அவர்கள் கருதுகிறார்கள்.

தும்மல்
இது கொஞ்சம் சிரிப்பாக தான் இருக்கும். உடலுறவில் ஈடுபடும் போது விடாமல் தும்மல் வந்துக் கொண்டே இருப்பது பெண்களை சங்கோஜமடைய வைக்கிறது.

வயிற்றுப் போக்கு
தும்மலாவது பரவாயில்லை, சிலர் நன்கு வயிறு புடைக்க உண்டு விட்டு உடலுறவில் ஈடுபட முயலும் போது பின்வாசல் கதவை தட்டும். இது போன்ற ஒரு நிகழ்வு உடலுறவில் ஈடுபடும் போது யாருக்கும் ஏற்பட கூடாது.



Click it and Unblock the Notifications











