கிராமத்தையே வாய் பிளக்க வைத்து, விஜய் பட பாணியில் திருமணம் செய்துக் கொண்ட காதலர்கள்!

ஸ்ரீராமசேனா பிரமுகர் நடத்தி வைத்த விஜய் பட பாணி திருமணம். கர்நாடகாவில் நடந்த பரபர கல்யாணம்.

நடிகர் விஜயின் கேரியரில் திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் பூவே உனக்காக. நாம் காதலிக்கும் பெண் வேறு நபரை காதலிக்கிறார் என அறிந்தால், அவரை தொந்தரவு செய்யாமல் விட்டு விலகுவதே சிறந்தது பாடம் எடுத்த திரைப்படம்.

விக்ரமன் இயக்கத்தில் விஜய் நடித்த இந்த படம் கலப்பு திருமணம் பற்றிய கருத்தை முன் வைத்து எடுக்கப்பட்டது. மிக பெரிய வெற்றி படமாகவும் அமைந்தது. இதே பாணியில் கர்நாடகாவில் ஒரு காதல் ஜோடி திருமணம் செய்து அசத்தியுள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
யல்லபுரா!

யல்லபுரா!

கர்நாடகாவின் கார்வார் அருகே அமைத்திருக்கும் கிராமம் யல்லபுரா. இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் ரகீம்கான் மற்றும் காளம்மா.

காதல்!

காதல்!

ரகீம் கான் மற்றும் காளம்மா ஆரம்பக் காலத்தில் நட்பாக பழகி பிறகு காதல் உறவில் இணைந்தவர்கள். இவர்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

வீட்டார் எதிர்ப்பு!

வீட்டார் எதிர்ப்பு!

முஸ்லீம், இந்து என்ற மத வேறுபாடு ஒரே காரணம் காட்டி இவர்களது இரு வீட்டாரும் காதலுக்கு எதிர்ப்பு கூறி வந்தனர். மதம் மட்டுமே இவர்களது காதலுக்கு பெரும் தடையாக இருந்து வந்தது.

பூவே உனக்காக ஐடியா!

பூவே உனக்காக ஐடியா!

உடனே இதற்கு தீர்வாக ரகீம் கான் ஆர்யாவாக இந்து மகனாக மாறி தனது ஆசை காதலி காளம்மாவை பூவே உனக்காக பாணியில் மதம் மாறி திருமணம் செய்துக் கொண்டார்.

ஸ்ரீராமசேனா பிரமுகர்!

ஸ்ரீராமசேனா பிரமுகர்!

இந்த கலக்கல் திருமணத்தை ஸ்ரீராமசேனாவை சேர்ந்த பிரமுகர் பிரமோத் முதாலிக் நடத்தி வைத்தார் என கூறப்படுகிறது. இந்த சினிமா பாணி திருமணம் அந்த ஊரில் பரபரப்பு செய்தியாக மாறியுள்ளது.

யார் இந்த பிரமோத் முதாலிக்!

யார் இந்த பிரமோத் முதாலிக்!

இந்த அசத்தல் திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்த பிரமோத் முதாலிக் காதலர் தினத்தன்று எதிர்ப்பு தெரிவித்து பெண்களிடம் இருந்து உள்ளாடைகளை பரிசாக வாங்கியவர் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion