Just In
- 39 min ago தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- 4 hrs ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 9 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 11 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
Don't Miss
- Technology பழைய iPhone 13, iPhone 14 ஆஃபரை தூக்கி குப்பையில போடுங்க.. iPhone 15 Pro மீது ரூ.16,700 டிஸ்கவுண்ட் அறிவிப்பு!
- News 2019 vs 2024: 35 தொகுதிகளில் வாக்குப்பதிவு கடும் சரிவு.. 4 தொகுதிகளில் மட்டும் உயர்வு.. எங்கெங்கு?
- Movies பண்றது எல்லாமே திருட்டுத்தனம்.. கணவருடன் சேர்ந்து கொண்டு பிரபல நடிகை பார்த்த வேலை.. ஒரே அசிங்கம்?
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சாமுத்ரிகா சாஸ்திரம்: ஆண்களிடம் இருக்க வேண்டிய 20 திருமண இலட்சணங்கள்!
திருமணம் என்று வந்துவிட்டாலே முதலில் ஜாதக பொருத்தம் பார்பார்கள், பிறகு குடும்பத்தை பற்றி விசாரிப்பார்கள். இதற்க்கெல்லாம் மேல் ஆண் மற்றும் பெண்ணிடம் நல்ல இலட்சணங்கள் இருக்கின்றனவா என்று பார்ப்பார்கள். இந்த இலட்சணங்களில் அழகும் ஒரு பங்கு வகித்தாலும். அதற்கு மேலானவை நிறைய இருக்கின்றன.
ஒழுக்கமாக வாழ்தல், பெரியவர்களுக்கு மரியாதை அளித்தால், கர்வம், அகம்பாவம் இல்லாமல் நடந்துக் கொள்தல் என 20 இலட்சணங்கள் இருப்பதாய் சாமுத்ரிகா சாஸ்திரம் கூறுகிறது. இதில் 12 இலட்சணங்கள் இருந்தால் கூட அந்த ஆணை கண்ணை மூடிக் கொண்டு திருமணம் செய்துக் கொள்ளலாம் என்றும் கூருகின்றனர்...
தைரியமும், பொறுமையும்
தைரியமும், பொறுமையும் இருக்க வேண்டும். எந்த ஒரு சூழலிலும் இந்த இரண்டையும் இழந்துவிட கூடாது. அது பெரிதாக இருந்தாலும் சரி, சிறிதாக இருந்தாலும் சரி.
கவனம்!
வாழ்க்கையில் எல்லா தருணத்திலும் கவனமுடன் இருக்க வேண்டும். எடுக்கும் முடிவுகளிலும், ஈடுபடும் செயல்களிலும் கவனமாக இருத்தல் அவசியம்.
MOST READ: சிறை வாழ்க்கை குறித்து பெண் கைதிகள் கூறும் திடுக்கிடும் உன்மை வாக்கு மூலங்கள்!
நல்ல நோக்கம்!
நல்ல நோக்கங்கள் இருக்க வேண்டும். அனைவரையும் ஊக்குவிக்க வேண்டும்.உடல் மற்றும் சமூக ஆரோக்கியம் கொண்டிருக்க வேண்டும்.
தளர்ந்துவிடக் கூடாது!
எந்த ஒரு தருணத்திலும் தளர்ந்து விட கூடாது. கடுமை, தீர்வுக் கிடைக்கவில்லை போன்ற காரணம் கூறி நகர்ந்து விட கூடாது. கடிமையாக வேலை செய்ய தயங்க கூடாது.
பகிர்தல்!
குடும்பத்துடனும், நண்பர்களுடனும் பகிர்ந்துக் கொள்ளும் பண்பு இருக்க வேண்டும். அது உணவாகவோ, மகிழ்ச்சியாகவோ, பணமாகவோ எதுவாக இருப்பினும்.
காதும், இதயமும்!
சொற்களுக்கு காதையும், உணர்வுகளுக்கு இதயத்தையும் எப்போதும் தயங்காமல் கொடுப்பவனாக இருக்க வேண்டும். எதையும் முழுமையாக செய்ய வேண்டும்.
MOST READ: மறந்தும் கூட இந்த பொருட்களை காலை உணவிற்கு முன் சாப்பிட்டு விடாதீர்கள்
அபாயம்!
ஆபத்து / அபாயங்கள் குறித்து தெரிந்திருக்க வேண்டும். இந்த சூழல்களை எப்படி கையாள வேண்டும் என்ற மனோப் பக்குவம் இருக்க வேண்டும்.
இரகசியங்கள்!
இரகசியங்கள் காக்க தெரிந்திருக்க வேண்டும். அனைவருக்கும் உண்மையாக இருக்க வேண்டும். உள்ளொன்றுமாக, புறமொன்றுமாக இருத்தல் கூடாது.
விடா முயற்சி!
வாழ்க்கையின் எல்லா தருணத்திலும் பொறுமையும், விடா முயற்சியும் கொண்டிருக்க வேண்டும். அது உறவாக இருபினும் சரி, வேலையாக இருப்பினும் சரி.
நல்லவை, கெட்டவை!
தேவையற்றதை மறக்கவும் கற்றிருக்க வேண்டும். வேண்டாதவற்றை எண்ணி எண்ணி வருந்தும் குணம் இருத்தல் கூடாது. அதே போல நல்லவற்றை / நல்லவர்களை மறந்துவிடவும் கூடாது.
MOST READ: குடலில் உள்ள கழிவுகளை ஒரே நாளில் வெளியேற்றும் மூன்று அற்புத ஜூஸ்கள்
பணிவு!
பணிவாக நடந்துக் கொள்ள வேண்டும். பணம், வெற்றி காரணம் காட்டி அகம்பாவம் வெளிப்படுத்த கூடாது. அகம்பாவம் நல்லறிவு, சிறப்புகள் போன்றவற்றை அழிக்கும் என்பதை அறிந்திருக்க வேண்டும்.
இலட்சியம்!
இலட்சியம் கொண்டிருக்க வேண்டும், தன்னை சுற்றி இருப்பவர்களிடம் தாழ்மையுடன் நடந்துக் கொள்ள வேண்டும்.
திறமை!
தன்னிடம் திறமை இருக்கிறது என்பதற்காக, தன்னால் சாதிக்க முடியும் என்பதற்காக, மற்றவர்களை தாழ்த்தி மதிப்பிட கூடாது.
ஆரோக்கியம்!
உணவு மீதும், ஆரோக்கியத்தின் மீதும் பெரும் அக்கறை கொண்டவராக இருக்க வேண்டும். தன்னை சுற்றி இருப்பவர்களையும் இது சார்ந்து ஊக்கப்படுத்த வேண்டும்.
MOST READ: வயிற்றில் 38 கிலோ எடையுள்ள புற்றுநோய் கட்டி... அறுவை சிகிச்சை மூலம் வெளியேற்றம்
சோம்பேறித்தனம்!
தூங்கிக் கொண்டே இருக்கும் மலை பாம்பாக இருக்க கூடாது. சோம்பேறியாக இருக்க கூடாது. சுறுசுறுப்பாக செயற்படக் கூடிய நபராக இருக்க வேண்டும்.
கர்வம் கூடாது!
தான் உயர்ந்த நிலையில் இருந்தாலும், பெரியவர்கள், முன்னோர்கள், சான்றோர்கள் அனைவருக்கும் மதிப்பளிக்க தெரிந்த குணம் இருக்க வேண்டும்.
ஏமாற்றுதல்!
தன்னை விட வலுவற்றவன் என்பதால் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அவர்களை ஏமாற்றுதல், பணம் பிடுங்குதல் போன்ற சம்பவங்களில் ஈடுபட கூடாது.
பின்வாங்குதல்!
எந்த தடங்கல் வந்தாலும், தான் விரும்பும் நபர்களிடம் / வேலையில் இருந்து பின்வாகும் குணம் இருக்க கூடாது.
பொறுமை இழத்தல்!
தன்னை உசுப்பி பார்க்க விஷமிகள் செய்யும் சித்து விளையாட்டுக்கு எல்லாம் தன் பொறுமை இழக்க கூடாது. சரியாக விசாரிக்காமல், தன் நண்பர்கள், குடும்பத்தினர் மீது சந்தேகப்படக் கூடாது.
MOST READ: எப்படிப்பட்ட வழுக்கையிலும் முடி வளரச் செய்யும் அற்புத எண்ணெய்கள்... வீட்டிலே தயாரிக்கலாம்
கனவு!
தன் கனவுகளைவிட்டு ஒருபோதும் நகர்ந்துவிட கூடாது. நல்லவை மீதான நம்பிக்கை இழக்க கூடாது.