Latest Updates
-
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்!
2030-ல் இத்தனை சதவீத பெண்கள் சிங்கிளாகவும், குழந்தை இல்லாமலும் இருப்பார்களாம்..ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு
மாறிவரும் தொழில்நுட்பமும், வாழ்க்கைமுறையும் நம்முடைய அன்றாட வாழ்வில் மட்டுமின்றி ஒட்டுமொத்த வாழ்விலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த மாற்றங்கள் சமூகத்தின் இயக்கவியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. முக்கியமாக பெண்களின் கடமைகள் பற்றிய பார்வைகள் தெளிவாக மாறிவிட்டன.
இது பாரம்பரிய குடும்பப் பொறுப்புகளை விட அவர்களின் வேலைக்கும், எதிர்காலத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வாழ்க்கைமுறை முடிவுகளை நோக்கி அவர்களை நகர்த்தியுள்ளது. சமீபத்திய மோர்கன் ஸ்டான்லி கணக்கெடுப்பின்படி, கடந்த தசாப்தங்களை விட, 25-44 வயதுடைய பெண்களில் சுமார் 45% பேர் குழந்தை இல்லாதவர்களாகவும், சிங்கிளாக இருப்பவர்களாகவும் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் ஏன் சிங்கிளாக இருக்க முடிவெடுக்கிறார்கள்
பெண்கள் திருமணம் செய்வதைத் தள்ளிப்போடுவது அல்லது சிங்கிளாக இருக்கத் தேர்ந்தெடுப்பது இந்த ட்ரெண்டு அதிகரிப்பதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாகும். 20 களில் திருமணம் செய்வது வழக்கமாக இருந்த முந்தைய தலைமுறையிலிருந்து இது ஒரு பெரிய மாற்றமாகும். பெண்கள் இப்போது தங்கள் தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் வேலைக்கு முன்னுரிமை கொடுக்க விரும்புகிறார்கள். திருமணமாகாமல் இருப்பது அதிகளவில் கவர்ச்சிகரமான நிலையாக மாறி வருகிறது. நடுத்தர வயதை அடைந்து நீண்ட காலத்திற்குப் பிறகு, 30 மற்றும் 40 வயதுடைய பெண்களும் விவாகரத்து கோரி அல்லது மீண்டும் திருமணம் செய்து கொள்வதற்கு எதிராக முடிவெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
தாமதமாக குழந்தை பெறும் ட்ரெண்டு ஏன் அதிகரிக்கிறது?
கடந்த தசாப்தங்களில் பெண்கள் 20 வயதின் தொடக்கத்திலேயே தாயாகிவிடுவார்கள். ஆனால் தாயாக வேண்டும் என்ற எண்ணத்தை தாமதப்படுத்தும் அல்லது மறுபரிசீலனை செய்யும் போக்கு சமூகத்தில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும். வேலை-வாழ்க்கை சமநிலை, வேலை வளர்ச்சி மற்றும் குழந்தைகளைப் பெறுவதற்கான செலவு உள்ளிட்ட பல விஷயங்களால் இது ஏற்படுகிறது.
தற்போதைய காலகட்டத்தில், அதிகமான பெண்கள் தங்கள் வீடுகளில் முக்கிய வருமானம் ஈட்டுபவர்களாகவும், வீட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கை உருவாக்குகிறார்கள். இந்த மாற்றம் பெண்களுக்கு அவர்களின் தனிப்பட்ட மகிழ்ச்சி மற்றும் தொழில் வளர்ச்சியில் கவனம் செலுத்த நிதி சுதந்திரத்தை அளித்துள்ளது.
இது பொருளாதாரம் மற்றும் பணியிடத்தை எவ்வாறு பாதிக்கும்?
சிங்கிளாக இருக்கும் மற்றும் குழந்தை இல்லாத பெண்களின் அதிகரிப்பு பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகமான பெண்கள் திருமணம் மற்றும் குழந்தைகளைப் பெறுவதைத் தாமதப்படுத்தவோ அல்லது தவிர்க்கவோ தேர்வு செய்வதால், அவர்களின் நிதிச் செல்வாக்கு அதிகரிக்கும்.
2030 ஆம் ஆண்டளவில், திருமணம் மற்றும் பெற்றோரின் மீதான சமூகத்தின் பார்வைகளும் மாறக்கூடும். இது குழந்தைப் பராமரிப்பு, நெகிழ்வான வேலை நேரம் மற்றும் சம ஊதியம் போன்றவற்றில் மிகவும் முற்போக்கான கொள்கைகளுக்கு வழிவகுக்கும், இது பாலின ஊதிய இடைவெளியைக் குறைக்க உதவும்.
உலகப் பொருளாதாரத்தில் பெண்களின் பங்கு வரும் ஆண்டுகளில் மிகவும் முக்கியமானதாக மாறும் என்பது தெளிவாகிறது. இது அவர்களின் வளர்ந்து வரும் சுதந்திரத்தால் இயக்கப்படும் என்பதும், பணியிடத்தின் உள்ளேயும் வெளியேயும் சமமாக செல்வாக்கு செலுத்துவதும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.



Click it and Unblock the Notifications
