Latest Updates
-
10,000 ஆண்டுகளுக்கு முன்பே உலகில் தோன்றிய முதல் காய்கறி எது தெரியுமா? இப்போதும் நாம இதை சாப்பிடுறோம் -
வெயில் கொடுமையா? இந்த எளிய வாஸ்து மாற்றங்களைச் செஞ்சா போதும், வீடு ஏசி இல்லாமலே ஜில்லுனு இருக்கும்! -
கேரளா ஸ்டைல் விழிஞ்சம் சிக்கன் வறுவல் ரெசிபி - ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் செஞ்சு பாருங்க, அட்டகாசமா இருக்கும் -
300 ஆண்டுக்கு சனி ஜெயந்தி நாளில் உருவான ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்கப் போகுதாம் -
ஆந்திரா ஸ்பெஷல் குண்டூர் சிக்கன் மசாலா - எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 17 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுதாம் -
வார ராசிபலன் (17 May 2026-23 May 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிட்டும்.. -
சிக்கன் வாங்குனா.. ஒருடைம் இப்படி ஊறுகாய் செய்யுங்க.. 2 வாரம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
வரதட்சணை கொடுமையால் ஒரு உயிர் பலி! நொய்டா - போபால் சம்பவம் சொல்லும் அதிர்ச்சி தரும் உண்மை என்ன? -
தலைமுடி உதிர்வை நிறுத்தி, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கணுமா? அப்ப இந்த வெங்காய ஹேர் மாஸ்க்கை போடுங்க..
வார இறுதி நாட்களை காதல் மிகுந்ததாக மாற்றுவது எப்படி?
அன்றாட வேலை செய்து வார இறுதிக்காக காத்திருந்து ஓய்வு எடுப்பது என்பது வழக்கமான ஒன்று. மேலும், வார இறுதியில் ஒரேமாதிரியாக வீட்டில் ஓய்வு எடுப்பதை விட வெளியே எங்காவது சென்று சாப்பிட்டு, தங்கி வருவது போல் ஒரு திட்டத்தை தீட்டி, சுகமான ஒரு காதல் வாரமாக மாற்றலாம்.
இவ்வாறு திட்டம் செய்யும் போது, இருவருக்கிடையில் காதல் அதிகரிப்பதோடு, வேலைப் பளுவினால் ஏற்படும் மன அழுத்தமும் குறைந்து, மனம் அமைதியாக இருக்கும். மேலும் இந்த முறை சற்று வித்தியாசமான அனுபவத்தையும் தரும். அதற்கு எந்த மாதிரியான திட்டத்தை தீட்டினால் நன்றாக இருக்கும் என்று அனுபவசாலிகள் கூறுவதைப் படித்து பாருங்கள்.

* அவ்வாறு செல்லும் போது பிடித்தமான உடை அணிந்து கொண்டு, விருப்பமான இசை கேட்டு அனுபவிக்க இசை குறுந்தகடுகள், பயண தின்பண்டங்கள் போன்ற பிடித்த விஷயங்களை எடுத்து செல்லவும்.
* செல்லும் போது மறக்காமல் தேவையான அனைத்து பொருளையும் எடுத்து செல்லவும். அவ்வாறு மறக்காமல் எடுத்துச் செல்வதால், செல்லும் இடங்களில் பொருள் இல்லையே என்று டென்சன் அடையாமல், அந்த நாளில் சந்தோஷமாக, மகிழ்ச்சியாக இருக்கலாம்.
* இப்படி செய்வது அத்தனை ஆர்வம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இந்த சிறு விஷயங்கள் தான், சிறு வயதில் அனுபவித்த நினைவுகளை விட, மிகவும் சூப்பராக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
* எப்படியெனில் ஆங்காங்கே வழியில் காரை நிறுத்தி சிற்றுண்டி சாப்பிடுவது, படம் பிடித்து கொள்வது போன்ற விஷயங்கள் புத்துணர்வை ஏற்படுத்தும். சாந்தத்திற்கு முக்கிய முன்னுரிமை கொடுத்து ஒருவரை ஒருவர் காதல் செய்து அனுபவியுங்கள்.
* தங்க செல்லும் இடத்திற்கு அருகில் உள்ள ஆற்றின் ஓரம் நடந்து செல்லுதல், இயற்கையை ரசிப்பது, பறவைகளை கண்டு மகிழ்வது, கை கோர்த்து தெருவில் நடப்பது என அன்றைய தினத்தை அனுபவிக்கவும். இல்லையெனில் மனதை அமைதிப்படுத்த, படுக்கை அறையில் இருந்து ஜன்னல் ஓரம் உட்கார்ந்து இயற்கையின் அழகை ரசிக்கவும்.
* உறவின் பிணைப்பில் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவும். மேலும் உறவை தொடர்ந்த ஆரம்ப நாட்களை பற்றி பேசி உங்களை உணர்ந்து கொள்ளவும். பொறுப்புகள், நிதி விவகாரங்கள், முந்தைய சண்டை போன்றவற்றை பற்றி பேச வேண்டாம்.



Click it and Unblock the Notifications