Latest Updates
-
ஆகஸ்ட் மாதம் 2 முறை உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகுதாம் -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப செம்பருத்தி பூவை இப்படி யூஸ் பண்ணுங்க... -
ஆடிப்பெருக்கு ஸ்பெஷல் சிவப்பு அவல் கேசரி - 5 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
இந்தியாவின் 'தங்க நகரம்' என்று அழைக்கப்படும் அதிசய நகரம் - இதுக்கு என்ன காரணம் என்ன தெரியுமா? -
ஆகஸ்ட் 05-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது! -
உலகில் அதிக மின்சாரத்தை உபயோகிக்கும் டாப் 5 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
காரைக்குடி செட்டிநாடு சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
ஆடிப் பெருக்கு ஸ்பெஷல் மிளகு புளியோதரை ரெசிபி - இந்த மாதிரி புளி சாதம் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
எந்த நோய்க்கு எந்த ஜூஸ் குடிப்பது நல்லது? - விளக்கும் டாக்டர்.பிள்ளை! -
நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2027 வரை சகல நன்மைகளையும், ராஜயோகத்தையும் அடையப்போகும் ஒரே ராசி எது தெரியுமா?
உங்க மேல அவருக்கு காதல்னு எப்படி கண்டுபிடிக்கிறது?

நெஞ்சுக்குள் ஜில் உணர்வு
நட்பாய் இருக்கும் போது ஏற்படும் உணர்வு வேறு. அதுவே காதலாகினால் தோன்றும் உணர்வு வேறு. மனசுக்குள் ஜில் உணர்வு ஏற்படும், வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கும். என்ன செய்வது என்ற குழப்பமான நிலை ஏற்படும். யாரிடமும் கோபமோ, வருத்தமோ ஏற்படாது இதழோரம் ஒரு குறும்புன்னகை ஒட்டிக்கொண்டிருக்கும். இந்த அம்சங்கள் உங்களைப் பார்க்கும் போது உங்கள் நண்பருக்கு ஏற்படுகிறதா? அப்ப நிச்சயம் அவர் உங்கள் மீது காதல் வயப்பட்டிருக்கிறார்.
அடிக்கடி போன் வருதா
நட்பான தருணங்களை விட அதிகமான அளவில் போன் செய்கிறாரா? காலை தொடங்கி இரவு வரை எஸ்.எம்.எஸ் மழை பொழிகிறதா? மெயிலில் ரொமான்ஸ் படங்களும், மெசேஜ்களும் வருகிறதா? அப்புறம் என்ன சந்தேகமே இல்லை உங்கள் நண்பருக்கு உங்கள் மீதான காதல் வலுவடைந்துவிட்டது.
பிரிவு தாங்க முடியலையா?
நீங்கள் எங்காவது வெளியூர் சென்றால் அவரை பிரிய நேரிடுகிறதா? நட்பாய் இருந்தபோது அந்த பிரிவு பெரிதாக தோன்றியிருக்காது. அதுவே காதலாகி மாறியபின்னர் ஒருநாள் பிரிவுக்கு கூட மனது தாங்காது. நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அந்த இடத்திற்கு உங்களைத் தேடி வந்து விடுவார். அப்புறம் என்ன உங்களுக்கும் அவர் மீதான காதல் உறுதியாக இருந்தால் அவரைக் கண்டவுடன் மனதில் பட்டாம்பூச்சி பறந்தால், காத்திருக்காமல் காதலை சொல்லிவிடுங்களேன்.



Click it and Unblock the Notifications