Latest Updates
-
300 ஆண்டுக்கு சனி ஜெயந்தி நாளில் உருவான ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்கப் போகுதாம் -
ஆந்திரா ஸ்பெஷல் குண்டூர் சிக்கன் மசாலா - எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 17 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுதாம் -
வார ராசிபலன் (17 May 2026-23 May 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிட்டும்.. -
சிக்கன் வாங்குனா.. ஒருடைம் இப்படி ஊறுகாய் செய்யுங்க.. 2 வாரம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
வரதட்சணை கொடுமையால் ஒரு உயிர் பலி! நொய்டா - போபால் சம்பவம் சொல்லும் அதிர்ச்சி தரும் உண்மை என்ன? -
தலைமுடி உதிர்வை நிறுத்தி, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கணுமா? அப்ப இந்த வெங்காய ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
கணவர் மீது போலீசில் புகார் அளித்த செலின் ஜெட்லி! என்.ஆர்.ஐ திருமணங்களில் ஒளிந்திருக்கும் அந்த அதிர்ச்சி உண்மை என்ன? -
புதன் பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
கிராமத்து ஸ்டைல் தட்டப்பயறு சுரைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
பெண்கள் எப்படி இருந்தா ஆம்பளைகளுக்குப் பிடிக்கும்?

அந்த சமயத்தில் மேக்கப் போட்டால் ஆண்களுக்குப் பிடிக்கவே பிடிக்காதாம். இயற்கையாக, தத்ரூபமாக இருந்தால்தான் ஆண்களுக்குப் பிடிக்குமாம்.
பொருத்தமான உள்ளாடைகளை அணியும் பெண்களை ஆண்களுக்கு ரொம்பப் பிடிக்குமாம்.
உம்மென்று இருக்கும் பெண்களை விட நன்றாகப் பேசும் பெண்களை ஆண்களுக்குப் பிடிக்குமாம். அதிலும் ஜோக்காகப் பேசும் பெண்களை ரொம்பப் பிடிக்குமாம். மேலும் பெண்கள் அடிக்கடி புன்னகைத்தாலும் ஆண்கள் ரசிப்பார்களாம்.
ஒல்லிக்குச்சியாக இருக்கும் பெண்களை விட பூசினாற் போல இருக்கும் பெண்கள்தான் ஆண்களைக் கவருவதில் முதலிடத்தில் உள்ளனராம். சைஸ் ஜீரோ என்ற பெயரைக் கேட்டாலே ஆண்கள் டென்ஷனாகி விடுவார்களாம். அழகான, வளைவு நெளிவுகளோடு இருக்கும் பெண்களைத்தான் அவர்கள் அதிகம் விரும்புகிறார்களாம். சற்றே குண்டான, பெரிய மார்பகங்களுடன் கூடிய பெண்கள் என்றால் ஆண்களுக்கு ரொம்ப இஷ்டமாம்.
சோகமாக இருக்கும்போது ஆறுதலாகப் பேசும் பெண்களையும், எல்லா செயல்களிலும் உறுதுணையாக இருக்கும் பெண்களை, உறவின்போது வெளிப்படையாக, தான் நினைப்பதை செயல்படுத்தும் பெண்களையும் ஆண்கள் விரும்புவார்களாம்.
செக்ஸ் உறவின்போது ஆண்கள் வெறுக்கும் ஒரு விஷயம், தான் செய்ய நினைப்பது குறித்து மனைவி கிண்டலடிப்பதைத்தான். அதேபோல எல்லாம் எனக்கும் தெரியும் என்பதாக மனைவி காட்டிக் கொண்டாலும் அதை ஆண்கள் ரசிப்பதில்லையாம்.
அப்புறம், படுக்கை அறைக்குள் நுழைந்ததுமே தலைமுடியை கலைத்து ப்ரீயாக விட்டு விடுங்கள். அப்படி இருந்தால்தான் மனைவிமார்களை கணவர்களுக்குப் பிடிக்கிறதாம். அந்த தலைமுடிக்குள் கை விட்டு கோதுவதையும், விளையாடுவதையும் அவர்கள் அதிகம் விரும்புகிறார்களாம். எனவே உள்ளே நுழையும்போது ஒத்தை சடை, ரெட்டை சடையோடு போவதை தவிர்த்து விடுங்கள்.
இன்னொரு முக்கியமான விஷயம். எப்படிப்பட்ட மனசையும் கலைத்துப் போட உதவுவது மல்லிகைப் பூ. அதை தலை நிறைய வைத்துக் கொண்டு உள்ளே மட்டும் போங்களேன், பிறகு தெரியும் அதன் மகிமை. பெரும்பாலான ஆண்களுக்கு மனைவி தலை நிறைய மல்லிகைப்பூ வைத்திருப்பது பிடிக்கிறதாம். இருப்பினும் சிலருக்கு இதில் இஷ்டம் இருக்காது, எனவே அதை தெரிந்து கொண்டு பூவைத் தலையில் ஏற்றுவது நல்லது.
இப்படி சின்னச் சின்னதாக நிறைய விஷயங்களை ஆண்கள் மனதுக்குள் வைத்திருக்கிறார்கள். அதைப் புரிந்து கொண்டு மனைவியர் நடந்தால் ஆண்கள் எப்போதும் உங்களுக்குள்தான்... அதேபோல பெண்களுக்கும் இதுபோல எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகள் இருக்கலாம். அதையும் ஆண்கள் உணர்ந்து நடந்தால் அவர்களும் உங்களுக்குள்தான். இப்படி இருவரும் பரஸ்பரம் புரிந்து கொண்டு செயல்பட்டால் வாழ்க்கை முழுவதும் சுவாரஸ்யம்தான், சுகம்தான்...



Click it and Unblock the Notifications