Latest Updates
-
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்..
வாழ்க்கைக்கு பாதுகாப்பு தரும் மணவாழ்க்கை

பாதுகாப்பான தாம்பத்ய உறவு
திருமணம் என்பது ஆண், பெண் இணைப்பிற்கான அங்கீகாரம். இதனால் பாதுகாப்பான உறவு கிடைக்கும். கணவன் மனைவி இடையே ஆன ஆத்மார்த்தமான இந்த உறவு பேச்சிலர் வாழ்க்கையில் எதிர்பார்க்க முடியாது. பேச்சிலர் வாழ்க்கையை விட திருமண வாழ்க்கையில் நூறு சதவிகிதம் பாதுகாப்பான உறவு கிடைக்கும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
சந்ததிகள் உருவாகும்
திருமண வாழ்க்கையில் மற்றொரு அங்கீகாரம் குழந்தைகள். இது சந்ததியை தழைக்கச் செய்யும் உன்னத வாழ்க்கை. ஆனால் பேச்சிலராக இருப்பவர்கள் இது மாதிரியான மகிழ்ச்சியை எதிர்பார்க்க முடியாது.
உணர்வு ரீதியான உதவி
திருமணம் என்பது உணர்வு ரீதியான உறவுக்கான வடிகால். என் குடும்பம், என் வாழ்க்கை என்ற என்ற உணர்வு ஏற்படும். எந்த சந்தர்ப்பத்திலும் உன்னை கைவிட மாட்டேன் என்ற உறுதியோடு இணையும் கைகள்தான் இறுதிவரைக்கும் மகிழ்ச்சியோடு இணைபிரியாமல் இருக்கும். ஆனால் பிரம்மச்சாரி வாழ்க்கையில் இது போன்ற உணர்வு ரீதியான உறவு ஏற்பட வாய்ப்பில்லை.
சட்டரீதியான அங்கீகாரம்
திருமணத்தின் மூலம் மட்டுமே சட்டரீதியான அங்கீகாரம் கிடைக்கும். லிவிங் டு கெதர் வாழ்க்கையில் இதை எதிர்பார்க்க முடியாது.
தனியாக தவிக்கவேண்டாம்
திருமணம் என்பது தனிமையை விரட்டும் அருமருந்து எனவே தைரியமாக திருமணம் செய்து கொள்ளுங்கள் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். வேலை வாய்ப்பற்றவராக இருந்தாலும், திருமணம் முடிந்தவராக இருந்தால் அது உங்களுக்கு எளிதான,ஆரோக்கியமான காப்பீடு திகழ்கிறது.
அதேபோல் திருமணத்திற்கு பின்னர் இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் இருவரும் சேர்ந்து நிறைய பணம் சம்பாதிக்கவும், சேமிக்கவும் முடியும் என்பதும் நிபுணர்களின் ஆலேசானையாகும். என்ன பேச்சிலர் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து திருமணம் செய்துக்கொள்ள முடிவெடுத்து விட்டீர்களா?



Click it and Unblock the Notifications