Latest Updates
-
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும்
மஞ்ச பூசணி சாம்பார்
உங்களுக்கு மஞ்சள் பூசணிக்காய் ரொம்ப பிடிக்குமா? இதுவரை நீங்கள் மஞ்சள் பூசணியைக் கொண்டு பொரியல் செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அதைக் கொண்டு சாம்பார் செய்யலாம் என்பது தெரியுமா?
உங்களுக்கு மஞ்சள் பூசணிக்காய் ரொம்ப பிடிக்குமா? இதுவரை நீங்கள் மஞ்சள் பூசணியைக் கொண்டு பொரியல் செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அதைக் கொண்டு சாம்பார் செய்யலாம் என்பது தெரியுமா? மஞ்சள் பூசணிக்காய் இனிப்பு சுவையைக் கொண்டிருப்பதால் பலரும் இதைக் கொண்டு சாம்பார் செய்ய யோசிப்பார்கள். ஆனால் இதைக் கொண்டு சாம்பார் செய்தால் சுவையாக இருக்கும். இந்த சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு மஞ்ச பூசணி சாம்பார் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மஞ்ச பூசணி சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* துவரம் பருப்பு - 1/2 கப்
* தண்ணீர் - 2 கப்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
சாம்பாருக்கு...
* மஞ்சள் பூசணிக்காய் - 1 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (கீறியது)
* மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
* புளிச்சாறு - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் குக்கரில் துவரம் பருப்பை கழுவிப் போட்டு, அதில் மஞ்சள் தூள் மற்றும் 2 கப் நீரை ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்டு, 5 நிமிடம் குறைவான தீயில் வைத்துவிட்டு பின் அடுப்பை அணைக்க வேண்டும்.
* பின் விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பை கரண்டியால் மசித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் பூசணியை போட்டு நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் சுவைக்கேற்ப உப்பு, மசாலா பொடிகள் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்னர் அதில் வேக வைத்த பருப்பை சேர்த்து, அத்துடன் புளிச்சாறு மற்றும் தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு 5-8 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான மஞ்ச பூசணி சாம்பார் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications











