Just In
- 48 min ago வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 3 hrs ago மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- 4 hrs ago இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- 5 hrs ago உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
Don't Miss
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மஞ்ச பூசணி சாம்பார்
உங்களுக்கு மஞ்சள் பூசணிக்காய் ரொம்ப பிடிக்குமா? இதுவரை நீங்கள் மஞ்சள் பூசணியைக் கொண்டு பொரியல் செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அதைக் கொண்டு சாம்பார் செய்யலாம் என்பது தெரியுமா?
உங்களுக்கு மஞ்சள் பூசணிக்காய் ரொம்ப பிடிக்குமா? இதுவரை நீங்கள் மஞ்சள் பூசணியைக் கொண்டு பொரியல் செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அதைக் கொண்டு சாம்பார் செய்யலாம் என்பது தெரியுமா? மஞ்சள் பூசணிக்காய் இனிப்பு சுவையைக் கொண்டிருப்பதால் பலரும் இதைக் கொண்டு சாம்பார் செய்ய யோசிப்பார்கள். ஆனால் இதைக் கொண்டு சாம்பார் செய்தால் சுவையாக இருக்கும். இந்த சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
உங்களுக்கு மஞ்ச பூசணி சாம்பார் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மஞ்ச பூசணி சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* துவரம் பருப்பு - 1/2 கப்
* தண்ணீர் - 2 கப்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
சாம்பாருக்கு...
* மஞ்சள் பூசணிக்காய் - 1 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (கீறியது)
* மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
* புளிச்சாறு - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் குக்கரில் துவரம் பருப்பை கழுவிப் போட்டு, அதில் மஞ்சள் தூள் மற்றும் 2 கப் நீரை ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்டு, 5 நிமிடம் குறைவான தீயில் வைத்துவிட்டு பின் அடுப்பை அணைக்க வேண்டும்.
* பின் விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பை கரண்டியால் மசித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் பூசணியை போட்டு நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் சுவைக்கேற்ப உப்பு, மசாலா பொடிகள் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்னர் அதில் வேக வைத்த பருப்பை சேர்த்து, அத்துடன் புளிச்சாறு மற்றும் தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு 5-8 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான மஞ்ச பூசணி சாம்பார் தயார்.
Image Courtesy: yummytummyaarthi