Latest Updates
-
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
2 ஸ்பூன் கோதுமை மாவு வெச்சு.. ஈவ்னிங் இந்த கூழ் செஞ்சு குடிங்க.. வயிறும் நிறையும்.. ருசியாவும் இருக்கும்..
Wheat Koozh Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு எப்போதும் காபி, டீயை குடிக்க கொடுப்பதற்கு பதிலாக, அவ்வப்போது கூழ் செய்து கொடுங்கள். இதனால் வயிறும் நிறையும், உடலுக்கு சத்தும் கிடைக்கும்.
அதுவும் வீட்டில் 2 டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு இருந்தால், அதைக் கொண்டு அட்டகாசமான சுவையில் கூழ் செய்யுங்கள். இந்த கூழ் மாலை வேளையில் மட்டுமின்றி, காலையில் குடிக்கவும் ஏற்றதாக இருக்கும். ஒருமுறை இந்த கூழை செய்து குடித்தால், அடிக்கடி செய்து குடிப்பீர்கள். அந்த அளவில் சுவையாக இருக்கும்.

உங்களுக்கு கோதுமை கூழ் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை கூழ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தண்ணீர் - 2 1/2 டம்ளர்
* கோதுமை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
* சுக்கு பொடி - 2 சிட்டிகை
* வெல்லம் - 1/4 கப் (அ) சுவைக்கேற்ப
* துருவிய தேங்காய் - 1/4 மூடி
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 2 1/2 டம்ளர் நீரை ஊற்றி அடுப்பில்
வைத்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் ஒரு சிறிய கிண்ணத்தில் 2 டேபிள் ஸ்பூன் கோதுமை மாவை போட்டு,
அத்துடன் 1/4 டீஸ்பூன் உப்பு, 1/4 டீஸ்பூன் ஏலக்காய் தூள் மற்றும் 2
சிட்டிகை சுக்கு பொடி ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் சிறிது நீரை ஊற்றி கட்டிகளின்றி நன்கு கலந்து கொள்ள
வேண்டும்.
* பின்னர் அதை கொதித்துக் கொண்டிருக்கும் நீருடன் சேர்த்து நன்கு
கிளறி விட வேண்டும்.
* நன்கு கூழ் பதத்திற்கு ஓரளவு கெட்டியாகி வந்ததும், அதில்
சுவைக்கேற்ப வெல்லத்தை சேர்த்து நன்கு கிளறி விட்டு கொதிக்க வைக்க
வேண்டும்.
* வெல்லமானது நன்கு கரைந்ததும், துருவிய தேங்காயை சேர்த்து கிளறி, 1
கொதி வந்ததும் இறக்கி பரிமாறினால், சுவையான கோதுமை கூழ் தயார்.



Click it and Unblock the Notifications











