Latest Updates
-
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்..
2 ஸ்பூன் கோதுமை மாவு வெச்சு.. ஈவ்னிங் இந்த கூழ் செஞ்சு குடிங்க.. வயிறும் நிறையும்.. ருசியாவும் இருக்கும்..
Wheat Koozh Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு எப்போதும் காபி, டீயை குடிக்க கொடுப்பதற்கு பதிலாக, அவ்வப்போது கூழ் செய்து கொடுங்கள். இதனால் வயிறும் நிறையும், உடலுக்கு சத்தும் கிடைக்கும்.
அதுவும் வீட்டில் 2 டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு இருந்தால், அதைக் கொண்டு அட்டகாசமான சுவையில் கூழ் செய்யுங்கள். இந்த கூழ் மாலை வேளையில் மட்டுமின்றி, காலையில் குடிக்கவும் ஏற்றதாக இருக்கும். ஒருமுறை இந்த கூழை செய்து குடித்தால், அடிக்கடி செய்து குடிப்பீர்கள். அந்த அளவில் சுவையாக இருக்கும்.

உங்களுக்கு கோதுமை கூழ் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை கூழ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தண்ணீர் - 2 1/2 டம்ளர்
* கோதுமை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
* சுக்கு பொடி - 2 சிட்டிகை
* வெல்லம் - 1/4 கப் (அ) சுவைக்கேற்ப
* துருவிய தேங்காய் - 1/4 மூடி
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 2 1/2 டம்ளர் நீரை ஊற்றி அடுப்பில்
வைத்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் ஒரு சிறிய கிண்ணத்தில் 2 டேபிள் ஸ்பூன் கோதுமை மாவை போட்டு,
அத்துடன் 1/4 டீஸ்பூன் உப்பு, 1/4 டீஸ்பூன் ஏலக்காய் தூள் மற்றும் 2
சிட்டிகை சுக்கு பொடி ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் சிறிது நீரை ஊற்றி கட்டிகளின்றி நன்கு கலந்து கொள்ள
வேண்டும்.
* பின்னர் அதை கொதித்துக் கொண்டிருக்கும் நீருடன் சேர்த்து நன்கு
கிளறி விட வேண்டும்.
* நன்கு கூழ் பதத்திற்கு ஓரளவு கெட்டியாகி வந்ததும், அதில்
சுவைக்கேற்ப வெல்லத்தை சேர்த்து நன்கு கிளறி விட்டு கொதிக்க வைக்க
வேண்டும்.
* வெல்லமானது நன்கு கரைந்ததும், துருவிய தேங்காயை சேர்த்து கிளறி, 1
கொதி வந்ததும் இறக்கி பரிமாறினால், சுவையான கோதுமை கூழ் தயார்.



Click it and Unblock the Notifications