மழை நேரத்துல இந்த சாதத்தை அடிக்கடி செஞ்சு சாப்பிடுங்க.. நெஞ்சு சளியே பிடிக்காது...

Posted By:

Vetrilai Saadham Recipe In Tamil: மழைக்காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், வீட்டில் உள்ளவர்கள் அடிக்கடி சளி, இருமல் பிரச்சனையால் அவதிப்படுவதுண்டு. காலநிலை மாற்றத்தால் இப்படியான பிரச்சனைகளை சந்திப்பது பொதுவாக இருக்கலாம். இந்த சூழ்நிலையை தவிர்க்க நினைத்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த வேண்டும். அதற்கு நாம் உணவுகள் பெரிதும் உதவி புரிகின்றன.

அதுவும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சத்துக்களை நிறைந்த பொருட்களைக் கொண்டு சமைத்து சாப்பிடும் போது, உடலைத் தாக்கும் நோய்க்கிருமிகளை தாக்கும் திறன் மேம்படும். அப்படி மழைக்காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க உதவும் ஒரு அற்புதமான ரெசிபி தான் வெற்றிலை சாதம்.

Vetrilai Saadham How To Make a Betel Leaf Rice Recipe

இந்த வெற்றிலை சாதத்தை மழை காலத்தில் அடிக்கடி, அதுவும் வாரம் ஒருமுறை செய்து சாப்பிட்டால், நெஞ்சு சளி தொல்லையில் இருந்து விடுபடலாம். இந்த வெற்றிலை சாதம் மிகச்சிறந்த ஒரு லன்ச்பாக்ஸ் ரெசிபியும் கூட. இந்த சாதமானது எப்படி இருக்குமோ என்று நீங்கள் நினைக்கலாம். இந்த சாதம் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு ப்ரைடு ரைஸ் போன்ற சுவையில் தான் இருக்கும்.

உங்களுக்கு வெற்றிலை சாதத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெற்றிலை சாதம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* நெய் - 3 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 5 (பொடியாக நறுக்கியது)
* முந்திரி/வேர்க்கடலை - தேவையான அளவு
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* வெற்றிலை - 4 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* முருங்கைப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
* சாதம் - 2 கப்

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி உருகியதும், அதில் கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் முந்திரியை சேர்த்து, வெங்காயத்தை நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் மஞ்சள் தூள், சீரகத் தூள், மிளகுத் தூள் சேர்த்து, மிதமான தீயில் வைத்து, நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெற்றிலை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் உப்பு மற்றும் முருங்கைப் பொடியை சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து, அதில் வடித்து வைத்துள்ள சாதத்தை 2 கப் சேர்த்து நன்கு கிளறி விட்டு இறக்கினால், சுவையான வெற்றிலை சாதம் தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, July 24, 2025, 6:30 [IST]
Desktop Bottom Promotion