Latest Updates
-
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா?
வெந்தயக்கீரை வெச்சு ஒருடைம் இப்படி சாம்பார் செய்யுங்க.. உடல் சூடும் குறையும்.. டேஸ்ட்டும் நல்லா இருக்கும்..
Vendhaya Keerai Sambar In Tamil: கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வெயிலில் சிறிது நேரம் வெளியே சென்றுவிட்டு வந்தாலே, உடல் சூடு பிடித்துக் கொண்டு, நிறைய பேர் அவதிப்படுவதுண்டு. இந்நிலையில் கோடையில் உடல் சூட்டைக் குறைக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து அதிகம் உட்கொள்ள வேண்டும்.
அதுவும் கீரையை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், உடல் சூடும் குறையும், உடலுக்கும் நல்லது. வாரம் ஒருமுறை கீரையை உணவில் சேர்த்து வர, பல ஆரோக்கிய பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். முக்கியமாக கோடையில் கீரையை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். அதுவும் வாரத்திற்கு 2 முறை சேர்ப்பது நல்லது.

கீரையில் பல உள்ளன. அதில் ஒன்று தான் வெந்தயக்கீரை. இந்த கீரை சற்று கசப்பாக இருக்கும். ஆனால் இது உடல் சூட்டைக் குறைப்பதில் சிறந்தது. இந்த கீரையை வாங்கினால், அதைக் கொண்டு பொரியல் செய்து சாப்பிடுவதை விட, சாம்பார் செய்தால், பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.
மேலும் வெந்தயக்கீரை சாம்பார் செய்வது மிகவும் சுலபம். பேச்சுலர்கள் கூட இதை செய்யலாம். அந்த அளவில் ஈஸியாக இருக்கும். இந்த கீரை சாம்பாரை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.
உங்களுக்கு வெந்தயக்கீரை சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெந்தயக்கீரை சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வெந்தயக்கீரை - 1 கட்டு
* துவரம் பருப்பு - 1/2 கப்
* புளி - 1 எலுமிச்சை அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* சாம்பார் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் வெந்தயக்கீரையின் இலைகளை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் குக்கரில் துவரம் பருப்பை போட்டு 2 முறை கழுவிவிட்டு, பின்
அதில் 1 கப் நீரை ஊற்றி, அத்துடன் சிறிது மஞ்சள் தூள் மற்றும்
பெருங்காயத் தூள் சேர்த்து குக்கரை மூடி, அடுப்பில் வைத்து, 3 விசில்
விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பை மசித்துக் கொள்ள
வேண்டும். அதன் பின் புளியை வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்து, கைகளால்
பிசைந்து கரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் சுத்தம் செய்து வைத்துள்ள வெந்தயக்கீரையை போட்டு,
பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு வேக வைத்துள்ள துவரம் பருப்பை மசித்து சேர்த்து, அத்துடன்
சிறிது நீரை ஊற்றி கிளறி விட வேண்டும்.
* பின் ஊற வைத்து கரைத்து வைத்துள்ள புளி நீரை சேர்த்து கிளறி,
சுவைக்கேற்ப உப்பு சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் மிளகாய் தூள், சாம்பார் தூள் சேர்த்து கிளறி, பச்சை
வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும். சாம்பார் மிகவும் கெட்டியாக
இருந்தால், சிறிது நீரை ஊற்றி கலந்து, நன்கு கொதி வந்ததும் அடுப்பை
அணைத்துவிட்டால், சுவையான வெந்தயக்கீரை சாம்பார் தயார்.



Click it and Unblock the Notifications











