Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
சிம்பிளான... தக்காளி சட்னி
காலையில் இட்லி, தோசை போன்றவற்றிற்கு சிம்பிளான சைடு டிஷ் செய்து சாப்பிட நினைத்தால், வெங்காயம், பூண்டு எதுவும் சேர்க்காமல் வெறும் தக்காளியைக் கொண்டே அருமையான சட்னி செய்யலாம். குறிப்பாக இந்த சட்னி பேச்சுலர்களுக்கு ஏற்றவாறு செய்வதற்கு மிகவும் சிம்பிளாக இருக்கும்.
இங்கு அந்த சிம்பிளான தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்துப் பாருங்கள்.

தேவையான பொருட்கள்:
தக்காளி - 3
இஞ்சி - 1 இன்ச்
மிளகு - 1/2 டீஸ்பூன்
கிராம்பு - 2
வரமிளகாய் - 3
கடுகு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக தாளிக்க வேண்டும்.
பின் அதில் வரமிளகாய், கிராம்பு, மிளகு, பெருங்காயத் தூள் மற்றும் இஞ்சி சேர்த்து பொன்னிறமாக வதக்கி விட வேண்டும்.
பின்பு அதில் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை 6-7 நிமிடம் குறைவான தீயில் வதக்கி இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
பிறகு அதனை மிக்ஸியில் போட்டு, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
இறுதியில் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி சட்னியை ஊற்றி, 3-4 நிமிடம் குறைவான தீயில் கிளறி இறக்கினால், தக்காளி சட்னி ரெடி!!!
Image Courtesy: vegrecipesofindia



Click it and Unblock the Notifications