Latest Updates
-
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்! -
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்
தீயல் குழம்பு
தமிழ்நாட்டில் பிரபலமானது தான் தீயல் ரெசிபி. பொதுவாக இந்த ரெசிபியானது புளிக்குழம்பு போன்று இருக்கும். இந்த தீயல் ரெசிபியின் ஸ்பெஷலே அதன் மசாலா தான். அதிலும் இந்த மசாலாவை அம்மியில் அரைத்து செய்தால், தீயல் ரெசிபியின் சுவைக்கு இணையாக எதுவும் வர முடியாது.
மேலும் தீயல் ரெசிபியில் நமக்கு வேண்டிய எந்த ஒரு காய்கறிகளையும் பயன்படுத்தலாம். இங்கு முருங்கைக்காய் மற்றும் கத்திரிக்காய் பயன்படுத்தி தீயல் ரெசிபியானது செய்யப்பட்டுள்ளது. சரி, இப்போது தீயல் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
முருங்கைக்காய் - 1 (வெட்டியது)
கத்திரிக்காய் - 2 (நறுக்கியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
துருவிய தேங்காய் - 1/2 கப்
வரமிளகாய் - 2
மல்லி - 2 டீஸ்பூன்
மிளகு - 2 டீஸ்பூன்
புளி - 1 எலுமிச்சை அளவு
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் புளியை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் துருவிய தேங்காய், மிளகு, மல்லி, வரமிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி, பின் இறக்கி குளிர வைக்க வேண்டும்.
பின்பு அதனை மிக்ஸியில் போட்டு, லேசாக தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் முருங்கைக்காய், கத்திரிக்காய் சேர்த்து ஒரு 5-8 நிமிடம் வதக்க வேண்டும்.
அடுத்து, அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட் மற்றும் புளிச்சாறு சேர்த்து கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்கவிட்டால், தீயல் குழம்பு ரெடி!!!
Image Courtesy: Senthil Janaki



Click it and Unblock the Notifications