Latest Updates
-
ஜூன் 18-ல் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு பணம் மற்றும் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். -
அடுத்தமுறை சிக்கன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு குழம்பு வையுங்க.. இட்லிக்கு டக்கரா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 14 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டப்போகுதாம் -
ஜூன் 15-ல் உருவாகும் புதாதித்ய யோகத்தால் ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
நாட்டுக்கோழி வாங்குனா கர்நாடகா ஸ்டைலில் இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சுருக்குனு வேற லெவலில் இருக்கும் -
இந்த வாரம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்காம் -
200 பேர் மட்டுமே வாழும் இந்தியாவின் தனித்துவமான 8 கிராமங்கள் - இந்த கிராமங்களுக்கு போறதே ரொம்ப கஷ்டமாம் -
1 கப் அவல் இருந்தா ஈவ்னிங் டைம்ல இந்த பக்கோடாவை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 6 குணங்களில் ஒன்று உங்களுக்கு இருந்தாலும் உங்களுக்கு ஆயுள் ரொம்ப கம்மியாம் - ஜாக்கிரதை -
உருளைக்கிழங்கை இந்த மாதிரி கல்யாண வீட்டு ஸ்டைல் பால் கறி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
தீயல் குழம்பு
தமிழ்நாட்டில் பிரபலமானது தான் தீயல் ரெசிபி. பொதுவாக இந்த ரெசிபியானது புளிக்குழம்பு போன்று இருக்கும். இந்த தீயல் ரெசிபியின் ஸ்பெஷலே அதன் மசாலா தான். அதிலும் இந்த மசாலாவை அம்மியில் அரைத்து செய்தால், தீயல் ரெசிபியின் சுவைக்கு இணையாக எதுவும் வர முடியாது.
மேலும் தீயல் ரெசிபியில் நமக்கு வேண்டிய எந்த ஒரு காய்கறிகளையும் பயன்படுத்தலாம். இங்கு முருங்கைக்காய் மற்றும் கத்திரிக்காய் பயன்படுத்தி தீயல் ரெசிபியானது செய்யப்பட்டுள்ளது. சரி, இப்போது தீயல் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
முருங்கைக்காய் - 1 (வெட்டியது)
கத்திரிக்காய் - 2 (நறுக்கியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
துருவிய தேங்காய் - 1/2 கப்
வரமிளகாய் - 2
மல்லி - 2 டீஸ்பூன்
மிளகு - 2 டீஸ்பூன்
புளி - 1 எலுமிச்சை அளவு
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் புளியை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் துருவிய தேங்காய், மிளகு, மல்லி, வரமிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி, பின் இறக்கி குளிர வைக்க வேண்டும்.
பின்பு அதனை மிக்ஸியில் போட்டு, லேசாக தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் முருங்கைக்காய், கத்திரிக்காய் சேர்த்து ஒரு 5-8 நிமிடம் வதக்க வேண்டும்.
அடுத்து, அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட் மற்றும் புளிச்சாறு சேர்த்து கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்கவிட்டால், தீயல் குழம்பு ரெடி!!!
Image Courtesy: Senthil Janaki



Click it and Unblock the Notifications