Latest Updates
-
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா? -
கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
ப்ராக்கோலி சப்பாத்தி
சப்பாத்தியில் நிறைய வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் ப்ராக்கோலி சப்பாத்தி. இந்த சப்பாத்தி உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. ஏனெனில் ப்ராக்கோலியில் நிறைய சத்துக்களானது அடங்கியுள்ளது. எனவே இந்த ப்ராக்கோலியை உணவில் அதிகம் சேர்த்தால், பல நோய்களில் இருந்து தப்பிக்க முடியும். அதிலும் ப்ராக்கோலியை சாப்பிட பிடிக்காதவர்கள், அதனை சப்பாத்தியாக செய்து சாப்பிடலாம்.
இது ஒரு சிறந்த காலை உணவும் கூட. சரி, அந்த ப்ராக்கோலி சப்பாத்தியின் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 3 கப்
உப்பு - தேவையான அளவு
வெதுவெதுப்பான நீர் - 1 கப்
உள்ளே வைப்பதற்கு...
ப்ராக்கோலி - 1 (துருவியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு மென்மையாக பிசைந்து, சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, துருவிய ப்ராக்கோலியை சேர்த்து, 3-4 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
பின்பு சீரகப் பொடி, மல்லி தூள், மாங்காய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, 5-6 நிமிடம் மூடி வைத்து வேக வைத்து இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
அடுத்து கோதுமை மாவை சிறு உருண்டைகளாக்கிக் கொள்ள வேண்டும்.
பின் அவற்றில் ஒன்றை எடுத்து, சிறு சப்பாத்தியாக தேய்த்து, அதன் நடுவே ப்ராக்கோலி கலவையை வைத்து, நான்கு புறமும் மூடி, மீண்டும் சப்பாத்தியாக தேய்க்க வேண்டும். இதேப் போன்று அனைத்து உருண்டைகளையும் செய்ய வேண்டும்.
இறுதியில் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல்லானது காய்ந்ததும் எண்ணெய் தடவி, தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை ஒவ்வொன்றாக போட்டு, முன்னும் பின்னும் எண்ணெய் ஊற்றி, வேக வைத்து எடுக்க வேண்டும்.
இப்போது சூப்பரான ப்ராக்கோலி சப்பாத்தி ரெடி!!! இதனை சட்னியுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











