Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
மாங்காய் ஊறுகாய்
ஊறுகாய் என்றால் அனைவருக்குமே நா ஊறும். அதிலும் ஊறுகாயில் மாங்காய் ஊறுகாய்க்கு தான் அதிகமான அளவில் ஃபேன்கள் இருக்கின்றனர். இப்போது மாங்காய் சீசன் ஆரம்பித்து விட்டது. எனவே மாங்காய் ஊறுகாய் பிரியர்கள், இந்த சீசனை சரியாக பயன்படுத்திக் கொண்டால், அடுத்த வருடம் வரை தாராளமாக மாங்காய் ஊறுகாயை சாப்பிடலாம்.
எப்படியெனில் மாங்காய் ஊறுகாயை இதுவரை கடைகளில் தான் வாங்கி சாப்பிட்டிருப்போம். ஆனால் இப்போது அவற்றை எளிதான முறையிலும், சூப்பரான சுவையிலும் எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
பச்சை மாங்காய் - 8 துண்டுகள்
மிளகாய் தூள் - 4 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடுகு - 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
எண்ணெய் - 2 கப்
செய்முறை:
முதலில் மாங்காயை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின் அதனை ஒரு ஜாடியில் போட்டு, உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பெருங்காயத் தூள், மஞ்சள் தூள் போட்டு தாளிக்க வேண்டும்.
பின்பு அதனை நறுக்கிய மாங்காய் துண்டுகளுடன் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
வேண்டுமெனில் அத்துடன் தேவையான அளவு எண்ணெயை ஊற்றிக் கொண்டு, பின் அதனை ஒரு காட்டன் துணியால் காற்று புகாதவாறு நன்கு இறுக்கமாக கட்டிக் கொள்ள வேண்டும்.
பிறகு அந்த பாட்டிலை ஒரு வாரத்திற்கு தினமும் இரண்டு முறை குலுக்க வேண்டும். ஒரு வாரம் ஆன பின்பு, அந்த பாட்டிலை 2 வாரத்திற்கு வெயிலில் தினமும் 5-6 மணிநேரம் வைத்து எடுக்க வேண்டும்.
அவ்வாறு செய்யும் போது மாங்காய் துண்டுகள் மென்மையாவதோடு, ஊறுகாயின் நிறமும் மாறிவிடும்.
இப்போது சுவையான மாங்காய் ஊறுகாய் ரெடி!!! வேண்டுமென்றால் தினமும் இந்த மாங்காய் ஊறுகாயை வெயிலில் வைத்து எடுத்தால், ஊறுகாய் நன்கு சுவையோடு நீண்ட நாட்கள் இருக்கும்.



Click it and Unblock the Notifications