Latest Updates
-
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா? -
கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
பிரட் பக்கோடா
மாலையில் டீ, காபி குடிக்கும் போது, நன்கு மொறுமொறுவென்று இருக்கும் ஸ்நாக்ஸ்களை சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அப்போது பெரும்பாலும் பஜ்ஜி, போண்டாவைத் தான் வீட்டில் செய்து சாப்பிடுவோம். ஆனால் சற்று வித்தியாசமாக சாப்பிட வேண்டுமென்று நினைத்தால், பிரட் பக்கோடா சரியானதாக இருக்கும்.
இப்போது அந்த பிரட் பக்கோடாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
பிரட் துண்டுகள் - 5
உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து மசித்தது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
கடலை மாவு - 4 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
தக்காளி கெட்சப் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 1/2 கப்
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் மசித்த உருளைக்கிழங்கு, உப்பு, மிளகாய் தூள், மாங்காய் தூள், சீரகப் பொடி, பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் பிரட் துண்டுகளை முக்கோண வடிவில் வெட்டி, அதன் ஒரு பக்கத்தில் தக்காளி கெட்சப்பை தடவி, உருளைக்கிழங்கு கலவையை வைத்து, மற்றொரு பிரட் துண்டை வைத்து அழுத்தி, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு மற்றொரு பௌலில் கடலை மாவு, சீரகம், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்த கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டில் வைத்துள்ள பிரட்டை கடலை மாவு கலவையில் பிரட்டி போட்டு, 3-4 நிமிடம் பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து பிரட் துண்டுகளையும் போட்டு பொரித்து எடுத்தால், சுவையான பிரட் பக்கோடா ரெடி!!!



Click it and Unblock the Notifications











