Latest Updates
-
அடுத்தமுறை சிக்கன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு குழம்பு வையுங்க.. இட்லிக்கு டக்கரா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 14 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டப்போகுதாம் -
ஜூன் 15-ல் உருவாகும் புதாதித்ய யோகத்தால் ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
நாட்டுக்கோழி வாங்குனா கர்நாடகா ஸ்டைலில் இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சுருக்குனு வேற லெவலில் இருக்கும் -
இந்த வாரம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்காம் -
200 பேர் மட்டுமே வாழும் இந்தியாவின் தனித்துவமான 8 கிராமங்கள் - இந்த கிராமங்களுக்கு போறதே ரொம்ப கஷ்டமாம் -
1 கப் அவல் இருந்தா ஈவ்னிங் டைம்ல இந்த பக்கோடாவை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 6 குணங்களில் ஒன்று உங்களுக்கு இருந்தாலும் உங்களுக்கு ஆயுள் ரொம்ப கம்மியாம் - ஜாக்கிரதை -
உருளைக்கிழங்கை இந்த மாதிரி கல்யாண வீட்டு ஸ்டைல் பால் கறி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
ஜூன் 28-ல் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
சேமியா பன்னீர் உப்புமா
காலை வேளையில் எளிதில் சமைக்கக்கூடிய ரெசிபிக்கள் பல உள்ளன. அதில் இட்லி, தோசை, உப்புமா போன்றவை குறிப்பிடத்தக்கது. மேலும் இவை அனைத்திலும் பல வகைகள் உள்ளன. இப்போது அவற்றில் உப்புமாவில் ஒரு வகையைப் பார்க்கப் போகிறோம்.
அது என்னவென்றால், சேமியா பன்னீர் உப்புமா. இந்த சேமியா பன்னீர் உப்புமா செய்வது என்பது மிகவும் எளிது. மேலும் அனைவருக்கும் பிடித்த மாதிரியான ஒரு ரெசிபியும் கூட. சரி, இப்போது அந்த ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
சேமியா - 1 1/2 கப்
சீஸ் - 100 கிராம் (சிறு துண்டுகளாக்கப்பட்டது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 5 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு, பின் சேமியாவை போட்டு, உப்பு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, 2-3 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, நீரை வடிகட்டிவிட வேண்டும்.
பின் உடனே அதனை குளிர்ந்த நீரில் அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் இஞ்சி சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
பின் பச்சை மிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பிறகு சீஸ், மஞ்சள் தூள் சேர்த்து 4-5 நிமிடம் கிளறி விட்டு, வேக வைத்துள்ள சேமியாவை போட்டு, வேண்டுமெனில் உப்பு சேர்த்து, 5-6 நிமிடம் கிளறி விட்டு, இறக்க வேண்டும்.
இறுதியில் அதில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, நன்கு பிரட்டி, கொத்தமல்லியைத் தூவி பரிமாறினால், சூப்பரான சேமியா பன்னீர் உப்புமா ரெடி!!!



Click it and Unblock the Notifications