Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
ஆரோக்கியத்தை தரும் பீர்க்கங்காய் சட்னி
பொதுவாக பீர்க்கங்காய் வாங்கி வந்தால், கூட்டு தான் செய்து சாப்பிடுவோம். ஆனால் அந்த பீர்க்கங்காய் கொண்டு அருமையான சுவையில் சட்னி செய்து சாப்பிடலாம் என்பது தெரியுமா? ஆம், பீர்க்கங்காய் கொண்டு சட்னி செய்தால், அதனை தோசை, இட்லி, ஏன் சாதத்துடன் கூட சேர்த்து சாப்பிடலாம்.
அந்த பீர்க்கங்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரியாதா? அப்படியானால் கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
பீர்க்கங்காய் - 1 (தோல் சீவி நறுக்கியது)
வெங்காயம் - 1/2 (நறுக்கியது)
தக்காளி - 1 (சிறியது, நறுக்கியது)
புளி - 1 நெல்லிக்காய் அளவு
வரமிளகாய் - 6
உளுத்தம் பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உளுத்தம் பருப்பு மற்றும் வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட வேண்டும்.
பின்பு நறுக்கி வைத்திருக்கும் பீர்க்கங்காயை சேர்த்து, புளியையும் போட்டு சிறிது நேரம் வதக்கி இறக்க வேண்டும்.
பிறகு அதனை குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து, ஒரு பௌலில் போட்டுக் கொள்ள வேண்டும்.
இறுதியில், ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியில் ஊற்ற வேண்டும்.
இப்போது சுவையான பீர்க்கங்காய் சட்னி ரெடி!!! இது தோசை, இட்சி மற்றும் சாதத்திற்கும் சூப்பராக இருக்கும்.
Image Courtesy: itsfuncooking



Click it and Unblock the Notifications











