Latest Updates
-
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் -
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா? -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்
மைசூர் பருப்பு கடைசல் ரெசிபி
இந்திய உணவுகளில் சைடு டிஷ் என்று வரும் போது பருப்பு சேர்த்து செய்யப்படும் ரெசிபிக்கள் முதன்மையாக இருக்கும். மேலும் நிச்சயம் அனைவரது வீட்டிலும் ஒருசில பருப்புக்கள் ஸ்டாக்கில் இருக்கும். அப்படி உங்கள் வீட்டில் மைசூர் பருப்பு இருந்தால், அதனைக் கொண்டு அருமையான சுவையில் ஒரு கடைசல் செய்யலாம்.
மேலும் மைசூர் பருப்பானது பித்தநீர் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு சிறந்தது. அதுமட்டுமல்லாமல், இதனை சாப்பிட்டால் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். சரி, இப்போது மைசூர் பருப்பைக் கொண்டு எப்படி கடைசல் செய்வதென்று பார்ப்போம். குறிப்பாக இந்த ரெசிபி பேச்சுலர்கள் செய்வதற்கு ஏற்றவாறு ஈஸியாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:
மைசூர் பருப்பு - 1 கப் (30 நிமிடம் நீரில் ஊற வைத்தது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
பூண்டு - 5-6 பற்கள் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3-4 (நீளமாக கீறியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் ஊற வைத்துள்ள மைசூர் பருப்பை நன்கு கழுவி போட்டு, பின் தண்ணீர் ஊற்றி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, குக்கரை மூடி 4-5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
அதே சமயம், மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் நெய் ஊற்றி உருகியதும், வெங்காயத்தைப் போட்டு 2 நிமிடம் வதக்கி, பின் பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
அந்நேரத்தில் குக்கரில் உள்ள விசில் போய்விட்டால், குக்கரை திறந்து, பருப்பை மத்து கொண்டு லேசாக கடைய வேண்டும்.
பின்பு அடுப்பில் உள்ள வாணலியில் பச்சை மிளகாய், கரம் மசாலா மற்றும் தக்காளி சேர்த்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.
தக்காளியானது நன்கு வதங்கிவிட்டால், அதில் மிளகாய் தூளை போட்டு, கடைந்து வைத்துள்ள பருப்பை போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, வேண்டுமானால் சிறிது தண்ணீர் ஊற்றி, பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான மைசூர் பருப்பு கடைசல் ரெடி!!!



Click it and Unblock the Notifications