Latest Updates
-
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்!
மைசூர் பருப்பு கடைசல் ரெசிபி
இந்திய உணவுகளில் சைடு டிஷ் என்று வரும் போது பருப்பு சேர்த்து செய்யப்படும் ரெசிபிக்கள் முதன்மையாக இருக்கும். மேலும் நிச்சயம் அனைவரது வீட்டிலும் ஒருசில பருப்புக்கள் ஸ்டாக்கில் இருக்கும். அப்படி உங்கள் வீட்டில் மைசூர் பருப்பு இருந்தால், அதனைக் கொண்டு அருமையான சுவையில் ஒரு கடைசல் செய்யலாம்.
மேலும் மைசூர் பருப்பானது பித்தநீர் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு சிறந்தது. அதுமட்டுமல்லாமல், இதனை சாப்பிட்டால் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். சரி, இப்போது மைசூர் பருப்பைக் கொண்டு எப்படி கடைசல் செய்வதென்று பார்ப்போம். குறிப்பாக இந்த ரெசிபி பேச்சுலர்கள் செய்வதற்கு ஏற்றவாறு ஈஸியாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:
மைசூர் பருப்பு - 1 கப் (30 நிமிடம் நீரில் ஊற வைத்தது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
பூண்டு - 5-6 பற்கள் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3-4 (நீளமாக கீறியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் ஊற வைத்துள்ள மைசூர் பருப்பை நன்கு கழுவி போட்டு, பின் தண்ணீர் ஊற்றி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, குக்கரை மூடி 4-5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
அதே சமயம், மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் நெய் ஊற்றி உருகியதும், வெங்காயத்தைப் போட்டு 2 நிமிடம் வதக்கி, பின் பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
அந்நேரத்தில் குக்கரில் உள்ள விசில் போய்விட்டால், குக்கரை திறந்து, பருப்பை மத்து கொண்டு லேசாக கடைய வேண்டும்.
பின்பு அடுப்பில் உள்ள வாணலியில் பச்சை மிளகாய், கரம் மசாலா மற்றும் தக்காளி சேர்த்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.
தக்காளியானது நன்கு வதங்கிவிட்டால், அதில் மிளகாய் தூளை போட்டு, கடைந்து வைத்துள்ள பருப்பை போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, வேண்டுமானால் சிறிது தண்ணீர் ஊற்றி, பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான மைசூர் பருப்பு கடைசல் ரெடி!!!



Click it and Unblock the Notifications