Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
மைசூர் பருப்பு கடைசல் ரெசிபி
இந்திய உணவுகளில் சைடு டிஷ் என்று வரும் போது பருப்பு சேர்த்து செய்யப்படும் ரெசிபிக்கள் முதன்மையாக இருக்கும். மேலும் நிச்சயம் அனைவரது வீட்டிலும் ஒருசில பருப்புக்கள் ஸ்டாக்கில் இருக்கும். அப்படி உங்கள் வீட்டில் மைசூர் பருப்பு இருந்தால், அதனைக் கொண்டு அருமையான சுவையில் ஒரு கடைசல் செய்யலாம்.
மேலும் மைசூர் பருப்பானது பித்தநீர் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு சிறந்தது. அதுமட்டுமல்லாமல், இதனை சாப்பிட்டால் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். சரி, இப்போது மைசூர் பருப்பைக் கொண்டு எப்படி கடைசல் செய்வதென்று பார்ப்போம். குறிப்பாக இந்த ரெசிபி பேச்சுலர்கள் செய்வதற்கு ஏற்றவாறு ஈஸியாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:
மைசூர் பருப்பு - 1 கப் (30 நிமிடம் நீரில் ஊற வைத்தது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
பூண்டு - 5-6 பற்கள் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3-4 (நீளமாக கீறியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் ஊற வைத்துள்ள மைசூர் பருப்பை நன்கு கழுவி போட்டு, பின் தண்ணீர் ஊற்றி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, குக்கரை மூடி 4-5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
அதே சமயம், மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் நெய் ஊற்றி உருகியதும், வெங்காயத்தைப் போட்டு 2 நிமிடம் வதக்கி, பின் பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
அந்நேரத்தில் குக்கரில் உள்ள விசில் போய்விட்டால், குக்கரை திறந்து, பருப்பை மத்து கொண்டு லேசாக கடைய வேண்டும்.
பின்பு அடுப்பில் உள்ள வாணலியில் பச்சை மிளகாய், கரம் மசாலா மற்றும் தக்காளி சேர்த்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.
தக்காளியானது நன்கு வதங்கிவிட்டால், அதில் மிளகாய் தூளை போட்டு, கடைந்து வைத்துள்ள பருப்பை போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, வேண்டுமானால் சிறிது தண்ணீர் ஊற்றி, பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான மைசூர் பருப்பு கடைசல் ரெடி!!!



Click it and Unblock the Notifications











