Latest Updates
-
தங்கம் போல ஜொலிக்குற சருமம் வேண்டுமா? அப்ப மாம்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
நெல்லை ஸ்டைல் முருங்கைக்காய் புளிக்குழம்பு ரெசிபி - செஞ்சு பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
மாரடைப்பு பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்: யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் தெரியுமா? -
1 உருளைக்கிழங்கும், 1 கப் தயிரும் இருந்தா.. மதியம் 10 நிமிஷத்துல இந்த சைடுடிஷ் செய்யுங்க.. சாதத்துக்கு அள்ளும் -
டெல்லி-என்சிஆர் புழுதிப் புயல்: வீட்டைப் பாதுகாக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும்! -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் புது சொத்துக்களை வாங்கிக் குவிக்கப்போகும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் இவங்கதான் -
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா?
காராமணி சாண்ட்விச்
வட இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு பயறு தான் காராமணி. இந்த காராமணியை வைத்து மசாலா தான் செய்வார்கள். ஆனால் அந்த காராமணியை வைத்து சாண்ட்விச் கூட செய்யலாம் என்பது தெரியுமா?
இங்கு காலை வேளையில் விரைவில் செய்யக்கூடியவாறான காராமணி சாண்ட்விச்சின் எளிமையான செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:
காராமணி - 1/2 கப் (ஊற வைத்தது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பன்னீர் - 2 டீஸ்பூன் (துருவியது)
வெள்ளரிக்காய் - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
சாட் மசாலா - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1 சிட்டிகை
கருப்பு உப்பு - 1 சிட்டிகை
சீஸ் - 1 டீஸ்பூன்
பிரட் துண்டுகள் - 8
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய்/நெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஊற வைத்துள்ள காராமணியை நன்கு கழுவி, குக்கரில் போட்டு, சிறிது உப்பு சேர்த்து, 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
பின்னர் குக்கரை திறந்து, காராமணியை தனியாக ஒரு பௌலில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு சிறு பாத்திரத்தில் வெங்காயம், வெள்ளரிக்காய், பன்னீர் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, அத்துடன் சாட் மசாலா, மிளகாய் தூள், கருப்பு உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, பின் அதில் காராமணியை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின் பிரட் துண்டுகளை எடுத்து, அதில் வெண்ணெயை தடவி, அதன் மேல் துருவிய பன்னீரை பரப்பி, அடுத்து காராமணி கலவையை வைத்து, மற்றொரு பிரட்டால் மூடி, டோஸ்டரில் போட்டு பொன்னிறமாக டோஸ்ட் செய்து எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து பிரட் துண்டுகளையும் செய்தால், காராமணி சாண்ட்விச் ரெடி!!!



Click it and Unblock the Notifications