Latest Updates
-
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது...
உருளைக்கிழங்கு பஜ்ஜி
குளிர்காலத்தில் மாலையில் நன்கு சூடாகவோ அல்லது காரமாகவோ ஏதேனும் சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அப்போது வீட்டில் உருளைக்கிழங்கு இருந்தால், அவற்றை பஜ்ஜி செய்து சாப்பிட்டால், சூப்பராக இருக்கும். இங்கு அந்த உருளைக்கிழங்கு பஜ்ஜியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
அதனைப் படித்து அவற்றை மாலையில் செய்து சாப்பிட்டு மகிழுங்கள். அதிலும் இந்த பஜ்ஜியை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால், இன்னும் அருமையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 3
கடலை மாவு - 1 1/2 கப்
தண்ணீர் - 1 கப்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
பேக்கிங் சோடா - 2 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் உருளைக்கிழங்கை தோலுரித்து, உப்பு கலந்த நீரில் போட்டு, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் நீரை முற்றிலும் வடித்துவிட்டு, அதனை வட்டமாக நறுக்கி கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு பொளலில் கடலை மாவு, மிளகாய் தூள், கரம் மசாலா, பேக்கிங் சோடா, பெருங்காயத் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, மெதுவாக தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்திற்கு கெட்டி சேராதவாறு கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருளைக்கிழங்கை ஒவ்வொரு துண்டாக எடுத்து, கலந்து வைத்துள்ள பஜ்ஜி மாவில் நன்கு பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இதேப் போன்று அனைத்து உருளைக்கிழங்கையும் பொரித்து எடுத்தால், சுவையான உருளைக்கிழங்கு பஜ்ஜி ரெடி!!!



Click it and Unblock the Notifications











