Latest Updates
-
ஜூன் 29-ல் நடக்கப்போகும் புதனின் வக்ர பெயர்ச்சியால் செல்வத்தையும், புகழையும் அடையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சாணக்கிய நீதி படி இந்த 4 குணம் உள்ள பெண் அவரது கணவரின் வாழ்க்கையை சொர்க்கமாக மாற்றுவாராம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
கொள்ளு குழிப்பணியாரமும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 16 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணக்கஷ்டம் தேடிவருமாம் - ஜாக்கிரதை -
செவ்வாய் பெயர்ச்சியால் ஜூன் 21 முதல் இந்த 5 ராசிக்கு பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது.. -
ஜூன் 22-ல் நடக்கப்போகும் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இதுல ஒரு புறாவை தேர்ந்தெடுங்க.. அடுத்த 3 நாட்களில் உங்களுக்கு என்ன நடக்கும்-ன்னு சொல்றோம்.. -
மாங்காயுடன் வேர்க்கடலை சேர்த்து இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைச்சு பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த 5 ஃபேஸ் பேக்குகளை போடுங்க..
ஓணம் சத்ய ஸ்பெஷல்: பருப்பு குழம்பு
ஓணம் சத்ய என்றால் என்னவென்று தெரியுமா? ஓணம் சத்ய என்றால், வாழை இலையில் கேரளாவில் மிகவும் பிரபலமான சில உணவுகளை சமைத்து விருந்து செய்வது தான். அந்த வகையில் கேரளாவில் பருப்பு குழம்பும் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி. இந்த குழம்பை சாதத்துடன் சேர்த்து, நெய் ஊற்றி சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.
சரி, இப்போது அந்த கேரளா ஸ்டைல் பருப்பு குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
சீரகம் - 1/2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்ழுன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
வரமிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 3 கப்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பருப்பைப் போட்டு பொன்னிறமாக வறுத்து, தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
பின் மிக்ஸியில் தேங்காய், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் சீரகம் போட்டு, 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி, கெட்டியாக மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பருப்பைப் போட்டுஇ தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, மூடி 3 விசில் விட்டு இறக்கி குளிர வைக்க வேண்டும்.
குக்கரானது குளிர்ந்ததும், அதனை திறந்து, பாசிப்பருப்பை மத்து கொண்டு நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதனை வாணலியில் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விட்டு, அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையைப் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, தீயை குறைவில் வைத்து, 5-6 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
மற்றொரு அடுப்பில் ஒரு சிறிய வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து, 2-3 நிமிடம் நன்கு வதக்கி, பின் அதனைப் பருப்புக் கலவையில் ஊற்றி கிளறி, இறக்க வேண்டும்.
இப்போது அருமையான கேரளா ஸ்டைல் பருப்பு குழம்பு ரெடி!!!



Click it and Unblock the Notifications