Latest Updates
-
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
அருமையான... நீர் தோசை
பெரும்பாலும் தென்னிந்திய உணவுகளில் தோசை மிகவும் பிரபலமானது. மேலும் அத்தகைய தோசையில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. அதிலும் குழந்தைகளுக்கு தான் தோசை என்றால் மிகவும் பிடிக்கும். குறிப்பாக தோசை மொறுமொறுவென்று இருந்தால், நிறைய தோசை வயிற்றுக்குள் போகும். அத்தகைவாறு செய்யும் தோசைகளில், சாதாரணமாகவே தோசை சுடும் போதே மொறுமொறுவென்று இருக்கும் தோசை என்று சொன்னால, அது நீர் தோசை தான்.
இந்த நீர் தோசை செய்வது மிகவும் சுலபமானது. ஏனெனில் இந்த தோசை சுடும் மாவை, எப்போது அரைக்கிறோமோ, அரைத்தப் பின்பு அரை மணிநேரம் கழித்து தோசை சுட்டால் போதும். சரி, இப்போது அந்த நீர் தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 2 கப் (இரவில் ஊற வைத்தது)
தேங்காய் - 1 கப் (துருவியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஊற வைத்துள்ள அரிசியை நன்கு கழுவ வேண்டும்.
பின்னர் கிரைண்டரில் அரிசியைப் போட்டு, தேங்காய் மற்றும் தண்ணீர் சேர்த்து, நன்கு நைஸாக அரைக்க வேண்டும். பிறகு அதனை ஒரு மணிநேரம் தனியாக வைத்து விட வேண்டும்.
பின்பு அதில் உப்பு மற்றம் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் தேய்த்து சூடேற்ற வேண்டும்.
கல்லானது சூடேறியதும், அதில் கலந்து வைத்துள்ள மாவை வட்டமாக ஊற்ற வேண்டும்.
பின்னர் அதில் எண்ணெய் ஊற்றி, நன்கு மொறுமொறுவென்று வந்ததும், பரிமாறலாம்.
இந்த நீர் தோசையை தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னியுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.
குறிப்பு:
இந்த நீர் தோசையானது, மற்ற தோசையை விட சற்று வித்தியாசமானது. எப்படியெனில் மற்ற தோசைகளில், கல்லில் தோசை மாவை ஊற்றி, வட்டமாக தேய்க்க வேண்டும். ஆனால் இந்த தோசையில் தோசை மாவையே வட்டமாக ஊற்ற வேண்டும். மேலும் இதனை முன்னும், பின்னும் திருப்பிப் போட்டு சுடத் தேவையில்லை.



Click it and Unblock the Notifications











