Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
எலுமிச்சை ஓட்ஸ் ரெசிபி
நீரிழிவு நோயாளிகள் உணவில் கவனமாக இருக்க வேண்டும் என்பதால் அவர்கள் எதை சாப்பிடுவது என்று தெரியாமல் தினமும் ஒரே மாதிரியான உணவை சாப்பிடுவார்கள். ஏனெனில் கொஞ்சம் தவறான உணவை சாப்பிட்டாலும், அவர்களது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்துவிடும். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை, அத்தகையவர்களுக்காக ஒரு அருமையான காலை உணவைக் கொடுத்துள்ளது.
அந்த ரெசிபியின் பெயர் எலுமிச்சை ஓட்ஸ். இந்த ரெசிபி செய்வது மிகவும் எளிது. இப்போது அந்த ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் - 2 கப்
தண்ணீர் - 1 கப்
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன் (வறுத்தது)
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
வரமிளகாய் - 1 (நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப்பருப்பு சேர்த்து லேசான பொன்னிறத்தில் வறுக்க வேண்டும்.
பின்பு பச்சை மிளகாய், வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, தீயை குறைவில் வைத்து பெருங்காயத் தூளை சேர்த்து கிளறி விட வேண்டும்.
பிறகு மஞ்சள் தூள், தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, கலவையை கொதிக்க விட வேண்டும்.
கலவையானது கொதித்ததும், அதில் ஓட்ஸ் சேர்த்து கிளறி விட்டு, தீயை குறைவில் வைத்து ஓட்ஸை வேக வைக்க வேண்டும்.
ஓட்ஸானது வெந்ததும், அதனை இறக்கி, அதில் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி, மேலே வேர்க்கடலையை தூவினால், சுவையான எலுமிச்சை ஓட்ஸ் ரெடி!!!



Click it and Unblock the Notifications











