Latest Updates
-
புதன்-சுக்கிரன் ஒரே நாளில் நட்சத்திரத்தை மாற்றுவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
1/4 கப் வேர்க்கடலையும், சின்ன வெங்காயமும் இருந்தா இந்த ஆந்திரா சட்னியை அரைங்க - இட்லி,தோசைக்கு செமயா இருக்கும் -
குரு-சனி இணைந்து உருவாக்கும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க மூட்ட மூட்டையா பணத்தை அள்ளப்போறாங்க.. -
பிரைட் மாதம் கொண்டாடும் எல்ஜிபிடிகியூ இணையர்களே! பொது இடங்களில் பாதுகாப்பாக இருக்க இந்த 5 விஷயங்களை மறக்காதீங்க! -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க? ஜூன் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம் -
சப்பாத்திக்கு ஏற்ற க்ரீமி பன்னீர் சோயா - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஆர்சிபி வெற்றிக்கு பிறகு விராட் - அனுஷ்கா ஆடிய டான்ஸ்! இணையத்தை அதிரவைக்கும் அந்த வைரல் வீடியோ இதோ! -
சாணக்கிய நீதி படி இந்த 2 பழக்கங்கள் உங்களின் விதியையே மாற்றும் சக்தி உள்ளவையாம் - என்னென்ன பழக்கங்கள் தெரியுமா -
வெங்காய சாறு Vs பூண்டு எண்ணெய் - இவற்றில் தலைமுடி வளர்ச்சிக்கு சிறந்தது எது? -
மாங்காய் வாங்குனா இந்த மாதிரி பொரிச்ச குழம்பு செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும்
காஞ்சிபுரம் இட்லி
இட்லியில் எத்தனையோ வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் காஞ்சிபுரம் இட்லி. இந்த இட்லி மிகவும் ஆரோக்கியமான, அதே சமயம் மிகுந்த சுவையுடையது. இது காஞ்சிபுரத்தில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி.
இந்த இட்லியை சாம்பார், சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும். இங்கு அந்த காஞ்சிபுரம் இட்லியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம்.

தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பு - 1/4 கப்
அரிசி - 1/2 கப்
கடலைப் பருப்பு - 1/4 டேபிள் ஸ்பூன்
தயிர் - 1/8 கப்
முந்திரி - 100 கிராம்
பச்சை மிளகாய - 2 (நறுக்கியது)
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
இஞ்சி - 1/4 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பபிலை - சிறிது
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் உளுத்தம் பருப்பு மற்றும் அரிசியை நீரில் 4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் கடலைப் பருப்பையும் தனியாக நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் உளுத்தம் பருப்பு மற்றும் அரிசியை நன்கு சுத்தமாக கழுவி, ஓரளவு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதனை அதனை 6-8 மணிநேரம் வெதுவெதுப்பான இடத்தில் நொதிக்க விட வேண்டும்.
பிறகு அதில் தயிர், முந்திரி, பச்சை மிளகாய், தேங்காய், இஞ்சி, மிளகு தூள், கறிவேப்பிலை, நெய், உப்பு மற்றும் ஊற வைத்துள்ள கடலைப் பருப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
இறுதியில் அந்த மாவை இட்லி பாத்திரத்தில் இட்லிகளாக ஊற்றி எடுத்தால், காஞ்சிபுரம் இட்லி ரெடி!!!



Click it and Unblock the Notifications