Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
சுவையான... ரவா ரொட்டி
காலையில் வெறும் தோசை, இட்லி சாப்பிட்டு போர் அடித்திருந்தால், சற்று வித்தியாசமாக ரவை ரொட்டி செய்து சாப்பிடுங்கள். இந்த ரவை ரொட்டி செய்வதற்கு அரை மணிநேரம் போதும். அவ்வளவு சீக்கிரம் இந்த ரொட்டியை செய்யலாம்.
மேலும் குழந்தைகளும் இந்த ரவை ரொட்டியை விரும்பி சாப்பிடுவார்கள். அதுமட்டுமின்றி, வேலைக்கு செல்வோருக்கு இது ஒரு அருமையான காலை உணவு. சரி, இப்போது அந்த ரவை ரொட்டியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
ரவை - 1 கப் (வறுத்தது)
மைதா - 1/2 கப்
கோதுமை மாவு - 1/2 கப்
துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
இஞ்சி - 1/4 டீஸ்பூன் (துருவியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
சர்க்கரை - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் ரவை, மைதா, கோதுமை மாவு, தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி, சர்க்கரை மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் எண்ணெய் ஊற்றி ரொடி பதத்திற்கு பிசைந்து 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும்.
பிறகு பிசைந்து வைத்துள்ள மாவை சிறிது எடுத்து அதனை கையால் ரொட்டி போன்று தட்டி, தோசைக்கல்லில் போட்டு, தீயை குறைத்து, எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுக்க வேண்டும்.
இதேப்போல் அனைத்து மாவையும் ரொட்டிகளாக சுட்டு எடுக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications











