Latest Updates
-
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை! -
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க!
சுவையான... ரவா ரொட்டி
காலையில் வெறும் தோசை, இட்லி சாப்பிட்டு போர் அடித்திருந்தால், சற்று வித்தியாசமாக ரவை ரொட்டி செய்து சாப்பிடுங்கள். இந்த ரவை ரொட்டி செய்வதற்கு அரை மணிநேரம் போதும். அவ்வளவு சீக்கிரம் இந்த ரொட்டியை செய்யலாம்.
மேலும் குழந்தைகளும் இந்த ரவை ரொட்டியை விரும்பி சாப்பிடுவார்கள். அதுமட்டுமின்றி, வேலைக்கு செல்வோருக்கு இது ஒரு அருமையான காலை உணவு. சரி, இப்போது அந்த ரவை ரொட்டியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
ரவை - 1 கப் (வறுத்தது)
மைதா - 1/2 கப்
கோதுமை மாவு - 1/2 கப்
துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
இஞ்சி - 1/4 டீஸ்பூன் (துருவியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
சர்க்கரை - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் ரவை, மைதா, கோதுமை மாவு, தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி, சர்க்கரை மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் எண்ணெய் ஊற்றி ரொடி பதத்திற்கு பிசைந்து 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும்.
பிறகு பிசைந்து வைத்துள்ள மாவை சிறிது எடுத்து அதனை கையால் ரொட்டி போன்று தட்டி, தோசைக்கல்லில் போட்டு, தீயை குறைத்து, எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுக்க வேண்டும்.
இதேப்போல் அனைத்து மாவையும் ரொட்டிகளாக சுட்டு எடுக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications