Latest Updates
-
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம்
பசலைக்கீரை தேப்ளா
தேப்ளா என்பது ஒரு குஜராத்தி ஸ்டைல் ரெசிபி. இது சப்பாத்தி போன்றது தான். ஆனால் இது மிகவும் ஆரோக்கியமானது. அதிலும் பசலைக்கீரை தேப்ளாவை காலை வேளையில் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இந்த ரெசிபியானது உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு ஏற்றது.
அதுமட்டுமல்லாமல், இந்த ரெசிபியின் மூலம் கீரை சாப்பிட மறுக்கும் குழந்தைகளை, இதன் மூலம் கீரை சாப்பிட வைக்கலாம். சரி, இப்போது அந்த பசலைக்கீரை தேப்ளாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
பசலைக் கீரை - 1 கப் (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
சீரகம் - 1 டீஸ்பூன்
ஓமம் - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
தயிர் - 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, பசலைக் கீரை, சீரகம், ஓமம், தயிர், உப்பு, மஞ்சள் தூள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, வேண்டுமானால் சிறிது தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை 10 நிமிடம் தட்டு கொண்டு மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.
அடுத்து அதனை சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி போன்று தேய்த்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் தேய்த்து வைத்துள்ள தேப்ளாவை ஒவ்வொன்றாக போட்டு, முன்னும் பின்னும் எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சூப்பரான பசலைக்கீரை தேப்ளா ரெடி!



Click it and Unblock the Notifications