Latest Updates
-
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்.. -
ஜூன் 17-ல் உருவாகும் அரிய கிரக சேர்க்கையால் அற்புதமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
கோவை அன்னபூர்ணா ஹோட்டல் வெஜ் குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
இனிப்புகளின் ராஜா என்று அழைக்கப்படும் இனிப்பு எது தெரியுமா? உங்களுக்கு இந்த இனிப்பு பிடிக்குமா? -
எந்த கீரை வாங்கினாலும் இப்படி ஒருவாட்டி செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஜூலை 27-ல் நடக்கும் சனி வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கனவு நனவாகப்போகுது..! -
இந்த 4 மாதங்களில் பிறந்த பெண்கள் மிகச்சிறந்த அம்மாக்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன? -
முதலைகள் ஏன் கற்களை விரும்பி சாப்பிடுகின்றன தெரியுமா? இதுக்குப் பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா? -
International Yoga day 2026: வாய்வு தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? அப்ப தினமும் இந்த யோசனங்களை செய்யுங்க..
பசலைக்கீரை தேப்ளா
தேப்ளா என்பது ஒரு குஜராத்தி ஸ்டைல் ரெசிபி. இது சப்பாத்தி போன்றது தான். ஆனால் இது மிகவும் ஆரோக்கியமானது. அதிலும் பசலைக்கீரை தேப்ளாவை காலை வேளையில் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இந்த ரெசிபியானது உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு ஏற்றது.
அதுமட்டுமல்லாமல், இந்த ரெசிபியின் மூலம் கீரை சாப்பிட மறுக்கும் குழந்தைகளை, இதன் மூலம் கீரை சாப்பிட வைக்கலாம். சரி, இப்போது அந்த பசலைக்கீரை தேப்ளாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
பசலைக் கீரை - 1 கப் (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
சீரகம் - 1 டீஸ்பூன்
ஓமம் - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
தயிர் - 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, பசலைக் கீரை, சீரகம், ஓமம், தயிர், உப்பு, மஞ்சள் தூள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, வேண்டுமானால் சிறிது தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை 10 நிமிடம் தட்டு கொண்டு மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.
அடுத்து அதனை சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி போன்று தேய்த்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் தேய்த்து வைத்துள்ள தேப்ளாவை ஒவ்வொன்றாக போட்டு, முன்னும் பின்னும் எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சூப்பரான பசலைக்கீரை தேப்ளா ரெடி!



Click it and Unblock the Notifications