Latest Updates
-
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க..
சேனைக்கிழங்கு குருமா

தேவையான பொருட்கள்:
சேனைக்கிழங்கு - 1/2 கிலோ
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
குழம்பு மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
பட்டை - 1 இன்ச்
ஏலக்காய் - 1
கிராம்பு - 2
கல்பாசி - சிறிது
அன்னாசிப்பூ - 1
கடுகு - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் சேனைக்கிழங்கின் தோலை சீவி, சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய சேனைக்கிழங்கை பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் மிக்ஸியில் துருவிய தேங்காய், சோம்பு, கசகசா போட்டு, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி, அன்னாசிப்பூ சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கி, குழம்பு மிளகாய் தூளையும் சேர்த்து கிளற வேண்டும்.
பின்பு அத்துடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை ஊற்றி, சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
குருமாவானது நன்கு கொதித்ததும், அதில் பொரித்து வைத்துள்ள சேனைக்கிழங்கை சேர்த்து, கொதிக்கவிட்டு இறக்க வேண்டும்.
இப்போது சுவையான சேனைக்கிழங்கு குருமா ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி, சாதத்துடன் பரிமாறினால் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











