Latest Updates
-
செஃப் அருணா விஜய்யின் போண்டா மோர் குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
புதன் சுக்கிரன் ஆளும் ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
மாத்திரையின்றி பிபி கண்ட்ரோலா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்லும் இந்த 5 உணவுகளை தினமும் சாப்பிடுங்க போதும்.. -
சனி அமாவாசை: வீட்டின் இந்த ஒரு இடத்தில் மாற்றம் செஞ்சா மகாலட்சுமி தானாக வருவாள்! -
சாணக்கிய நீதி படி ஒரு பெண்ணை சிறந்த மனைவியாக 5 குணங்கள் என்னென்ன தெரியுமா? உங்க மனைவியிடம் இருக்கா? -
Vaikasi Matha Rasipalan 2026: வைகாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க... -
இன்றைய ராசிபலன் 15 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சவால்களால் ரொம்ப கஷ்டப்பட போறாங்களாம் -
13 வருடம் கழித்து சனிக்கிழமையில் வரும் சனி ஜெயந்தி: இந்த 3 ராசிக்காரங்க உச்சத்தை தொடப்போறாங்க.. -
சுக்கிரன் மிதுன ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
சிம்பிளான... தக்காளி சாம்பார்
விடுமுறை நாட்களில் அசைவ உணவுகளை காரமாக சமைத்து சாப்பிட்டு, வயிறு ஒருமாதிரி உள்ளதா? அப்படியெனில் தக்காளி கொண்டு சிம்பிளான முறையில் சாம்பார் செய்து சுவையுங்கள். உங்களுக்கு தக்காளி சாம்பார் எப்படி செய்வதென்று தெரியாதா? தொடர்ந்து படியுங்கள்.
ஏனெனில் இங்கு எளிமையான முறையில் தக்காளி சாம்பார் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சித்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மைசூர் பருப்பு/துவரம் பருப்பு - 1/2 கப்
தக்காளி - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
தண்ணீர் - 2 கப் + தேவையான அளவு
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
புளிச்சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள்-1/4 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் பருப்பை நன்கு கழுவி, குக்கரில் போட்டு தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் 2 கப் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 2 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரை திறந்து பருப்பை லேசாக மசித்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதோடு மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கிளறிக் கொள்ள வேண்டும்.
பின்பு புளிச்சாறு ஊற்றி, அடுப்பில் வைத்து 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.
பின் மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, குக்கரில் உள்ள சாம்பாருடன் சேர்த்து இறக்கி, கொத்தமல்லி தூவி கிளறினால், தக்காளி சாம்பார் ரெடி!!!



Click it and Unblock the Notifications