Latest Updates
-
3 கத்திரிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செம சூப்பரா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்...! -
யமனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையே அடியோடு மாறப்போகுது.. -
முகத்தில் உள்ள ஹோலி நிறங்களை நீக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1 வாழைப்பழமும் இருந்தா.. இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. 2 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சந்திர-சுக்கிர சேர்க்கையால் உருவாகும் ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.. -
ருசியான... பிடிக்கருணை கிழங்கு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
Lunar Eclipse 2026: சந்திர கிரகணத்தின் போது நிலா ஏன் சிவப்பு நிறமாக மாறுகிறது தெரியுமா? -
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் தன யோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
தட்டுக்கடை புதினா தக்காளி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லிக்கு செமயா இருக்கும்..
முருங்கைக்கீரை சாம்பார்
வாரம் ஒருமுறை கீரையை உணவில் சேர்த்து வந்தால், உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைத் தீர்க்கலாம். அதிலும் எளிதில் கிடைக்கும் முருங்கைக்கீரையை வாரம் இரண்டு முறை சாப்பிட்டு வந்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் அழிவதோடு, உடலின் இரும்புச்சத்தும் அதிகரிக்கும்.
சிலருக்கு முருங்கைக்கீரையை பொரியல் செய்து சாப்பிட பிடிக்காது. அத்தகையவர்கள் முருங்கைக்கீரையை சாம்பார் செய்து சாப்பிடலாம். இங்கு அந்த முருங்கைக்கீரை சாம்பாரை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து அதன்படி செய்து சுவைத்து மகிழுங்கள்.

தேவையான பொருட்கள்:
முருங்கைக்கீரை - 1/2 கப்
துவரம் பருப்பு - 1/4 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 2
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
புளி - 1 பெரிய நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
முதலில் துவரம் பருப்பை நீரில் 1/4 மணிநேரம் ஊற வைத்து நன்கு கழுவி, குக்கரில் போட்டு, அத்துடன் மஞ்சள் தூள், பூண்டு, பெருங்காயத் தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி அடுப்பில் வைத்து 2-3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் புளியை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பிறகு அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
அடுத்து முருங்கைக்கீரை மற்றும் தக்காளியை சேர்த்து, பின் புளிச்சாறு, உப்பு மற்றும் சாம்பார் பொடி சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
பின் அதில் வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து மீண்டும் நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், முருங்கைக்கீரை சாம்பார் ரெடி!!!



Click it and Unblock the Notifications











