Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
பருப்பு சுக்கா
பருப்பு வகைகளில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே அத்தகைய பருப்புக்களை வாரத்திற்கு 2 முறை உணவில் சேர்த்து வந்தால், உடலுக்கு வேண்டிய அத்தியவசிய சத்துக்கள் கிடைக்கும். இதனால் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு உண்டாவதைத் தடுக்கலாம். அதிலும் எப்போதும் ஒரே மாதிரியான ஸ்டைலில் பருப்புக்களை சமைப்பதை விட, சற்று வித்தியாசமாக செய்து பார்க்கலாம்.
இப்போது அந்த பருப்பு கொண்டு செய்யப்படும் சுக்காவின் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 1/2 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
இஞ்சி - 1/2 இன்ச்
பூண்டு - 4 பல்
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை - 1
செய்முறை:
முதலில் மிக்ஸியில் இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைத்து வைத்துள்ள இஞ்சி கலவையை போட்டு வதக்கி, நறுக்கிய வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு, பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்பு மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் கறிவேப்பிலை போட்டு நன்கு கிளறி, இத்துடன் பாசிப்பருப்பை நீரில் நன்கு கழுவிப் போட்டு, போதிய அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும்.
பிறகு அந்த கலவையை குக்கரில் ஊற்றி, அந்த குக்கரை அடுப்பில் வைத்து மூடி, 2-3 விசில் விட்டு இறக்கி, விசிலானது போனதும் குக்கரை திறந்து, பருப்பை மசித்துக் கொள்ள வேண்டும்.
பின் அதன் மேல், சிறிது சீரகத்தை வறுத்து பொடி செய்து தூவி, கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, சூடாக சாதத்துடன் பரிமாறினால், அருமையான தால் சுக்கா ரெடி!!!



Click it and Unblock the Notifications











