Latest Updates
-
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! -
சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்களை தீர்க்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
கர்நாடகா தக்காளி தம்பிலி ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் எங்கு சென்றாலும் மகாராணியாக ஆட்சி செய்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஹோட்டல் ஸ்டைல் மக்கானா கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப கறிவேப்பிலையை இந்த எண்ணெய்களுடன் சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
குடிமக்கள் அனைவரும் சொந்த வீடு வைத்துள்ள உலகின் அதிசய நாடு - இதற்கு காரணம் என்ன தெரியுமா? -
ராகுவின் நட்சத்திரத்துக்கு செல்லும் செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
சூரிய கிரகணத்திற்குப் பிறகு மோசமான காலகட்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
தயிர் பன்னீர் ரெசிபி
உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதில் தயிர் முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவாக காய்கறிகளை வைத்து தான் குழம்பு செய்வோம். ஆனால் இந்த தயிரை வைத்து கூட குழம்பு செய்யலாம். அதுவும் பால் பொருட்களில் ஒன்றான பன்னீரையும் அத்துடன் சேர்த்து, காரம் பிடிக்காதவர்களுக்கு ஏற்றவாறு குழம்பு செய்யலாம். பொதுவாக இந்த மாதிரியான காரமில்லாத குழம்பு குழந்தைகளுக்கு தான் பிடிக்கும்.
எனவே குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் மதிய வேளையில் சமைக்க வேண்டு

தேவையான பொருட்கள்:
பன்னீர் - 200 கிராம் (சிறிதாக வெட்டியது)
சோம்பு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கருஞ்சீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
தயிர் - 2 கப் (அடித்தது)
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், சோம்பு, கருஞ்சீரகம் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் அதில் பன்னீர் துண்டுகளை போட்டு 2-3 நிமிடம் வதக்கி, பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்பு மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து சிறிது நேரம் கிளறி, அடித்து வைத்துள்ள தயிரை சேர்த்து, உப்பு போட்டு, 10 நிமிடம் மூடி வைத்து கொதிக்க விட வேண்டும். (குழம்பு சற்று தண்ணீர் போன்று இருக்க வேண்டுமெனில் 1/2 கப் தண்ணீர் சேர்த்துக் கொண்டு கொதிக்க விடலாம்.)
குழம்பு நன்கு கொதித்ததும், அதனை இறக்கி, கொத்தமல்லி தூவி, சிறிது நேரம் மூடி வைக்க வேண்டும்.
இப்போது சுவையான தயிர் பன்னீர் ரெசிபி ரெடி!!! இதனை சாதம், புலாவ் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால், நன்றாக இருக்கும்.



Click it and Unblock the Notifications