Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
பசலைக் கீரை கச்சோரி
கச்சோரியில் பல வகைகள் உள்ளன. அவற்றில் வித்தியாசமான ஒரு கச்சோரி தான் பசலைக் கீரை கச்சோரி. இது மிகவும் ஆரோக்கியமான ஒரு ஸ்நாக்ஸ் என்று சொல்லலாம். அதிலும் இது வட இந்தியாவில் மிகவும் பிரபலமானது.
குறிப்பாக இந்த ஸ்நாக்ஸை கீரை சாப்பிட விரும்பாத குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால், அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இந்த பசலைக் கீரையில் இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதனை மாலை வேளையில் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள். இப்போது அந்த பசலைக் கீரை கச்சோரியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
பசலைக் கீரை - 1 கட்டு
கோதுமை மாவு - 2 கப்
இஞ்சி - 1 டீஸ்பூன் (துருவியது)
ஓமம் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பசலைக் கீரையை சுத்தம் செய்து, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, தீயை குறைவில் வைத்து 5 நிமிடம் அடுப்பில் வைக்க வேண்டும்.
பின்னர் அதனை எடுத்து, ஒரு தட்டில் வைத்து, தண்ணீர் முற்றிலும் வடியும் வரை வைக்க வேண்டும்.
பிறகு பசலைக் கீரையை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு பௌலில் கோதுமை மாவு, இஞ்சி, ஓமம், உப்பு, மிளகாய் தூள் மற்றும் அரைத்த பசலைக் கீரையை ஊற்றி, வேண்டுமெனில் தண்ணீர் சேர்த்து, போண்டா பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு அதனை சிறு உருண்டைகளாக உருட்டி தட்டில் 5 நிமிடம் தனியாக வைக்க வேண்டும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ள உருண்டையை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இதேப் போல் அனைத்து உருண்டைகளையும் பொரித்து எடுத்தால், சுவையான பசலைக் கீரை கச்சோரி ரெடி!!!



Click it and Unblock the Notifications