Latest Updates
-
300 ஆண்டுக்கு சனி ஜெயந்தி நாளில் உருவான ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்கப் போகுதாம் -
ஆந்திரா ஸ்பெஷல் குண்டூர் சிக்கன் மசாலா - எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 17 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுதாம் -
வார ராசிபலன் (17 May 2026-23 May 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிட்டும்.. -
சிக்கன் வாங்குனா.. ஒருடைம் இப்படி ஊறுகாய் செய்யுங்க.. 2 வாரம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
வரதட்சணை கொடுமையால் ஒரு உயிர் பலி! நொய்டா - போபால் சம்பவம் சொல்லும் அதிர்ச்சி தரும் உண்மை என்ன? -
தலைமுடி உதிர்வை நிறுத்தி, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கணுமா? அப்ப இந்த வெங்காய ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
கணவர் மீது போலீசில் புகார் அளித்த செலின் ஜெட்லி! என்.ஆர்.ஐ திருமணங்களில் ஒளிந்திருக்கும் அந்த அதிர்ச்சி உண்மை என்ன? -
புதன் பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
கிராமத்து ஸ்டைல் தட்டப்பயறு சுரைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
உருளைக்கிழங்கு பக்கோடா
உருளைக்கிழங்கு வைத்து எந்த ஒரு ரெசிபி செய்தாலும், அதன் சுவைக்கு அளவே இல்லை. உருளைக்கிழங்கை எப்படி செய்தாலும், அது விரும்பி சாப்பிடுவதற்கு ஏற்றவாறு தான் இருக்கும். அதிலும் மாலை வேளையில் டீ/காபி குடிக்கும் போது, வீட்டில் இருக்கும் உருளைக்கிழங்கை பக்கோடா போன்று செய்து சாப்பிட்டால், ஆஹா எவ்வளவு அருமையாக இருக்கும்.
இப்போது அந்த உருளைக்கிழங்கு பக்கோடாவை எப்படி செய்வதென்று, அதன் செய்முறையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 2 பெரியது (தோலுரித்து, வேண்டிய வடிவில் நறுக்கியது)
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 2 கப்
கறிவேப்பிலை - சிறிது (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
சோடா உப்பு - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் நறுக்கிய உருளைக்கிழங்கு, கறிவேப்பிலை, கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், சோடா உப்பு, உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி, பக்கோடா பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கு கலவையை உதிர்த்து போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இதேப் போன்று அனைத்து மாவையும் பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான உருளைக்கிழங்கு பக்கோட் ரெடி!!! இதனை தேங்காய் சட்னி அல்லது தக்காளி சாஸ் உடன் தொட்டு சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications