Latest Updates
-
சூரியன் சுக்கிரனின் நட்சத்திரத்திற்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
உடுப்பி தேங்காய் கொத்தமல்லி சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிவு குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு இளைஞர்களுக்கு நிம்மதி! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..! -
Mothers day 2026: உலக அன்னையர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன தெரியுமா? -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு ஜோடிகளுக்கு நிம்மதி! -
வெறும் 4 பொருளை வெச்சு ஈஸியா மாம்பழ புட்டிங் செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க.. -
தங்கம் போல ஜொலிக்குற சருமம் வேண்டுமா? அப்ப மாம்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
நெல்லை ஸ்டைல் முருங்கைக்காய் புளிக்குழம்பு ரெசிபி - செஞ்சு பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா?
கேரட் பீன்ஸ் சாதம்
மழைக்காலத்தில் காலை வேளையில் சீக்கிரம் எழுவது என்பது கடினமான ஒன்று. ஏனெனில் மற்ற காலங்களை விட, மழைக்காலத்தில் வானிலையானது இதமாக இருப்பதால், படுக்கையில் இருந்து எழுவதே சிரமமான ஒன்றாக உள்ளது. அதிலும் பள்ளிக்கு செல்லும் குழந்தைக்கு அல்லது வேலைக்கு செல்வோருக்கு, காலை வேளையில் சமைத்துக் கொடுக்க தாமதமாக எழுந்துவிட்டால், அப்போது எளிதில் செய்யக்கூடிய வகையில் கேரட் பீன்ஸ் சாதம் ரெசிபி சரியானதாக இருக்கும்.
மேலும் இந்த ரெசிபி மதிய வேளையிலும் சாப்பிடக்கூடியவாறு அருமையான சுவையில் இருக்கும். இப்போது அந்த கேரட் பீன்ஸ் சாதத்தை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
சாதம் - 2-3 கப்
கேரட் - 4-5 (நீளமாக மற்றும் மெல்லியதாக சீவியது)
பீன்ஸ் - 8-10 (நறுக்கியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
புலாவ் மசாலா - 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்து, வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
பின் இஞ்சி பூண்டு பேஸ்ட், கேரட், பீன்ஸ் மற்றும் குடைமிளகாய் சேர்த்து வதக்கி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, தீயை குறைவில் வைத்து, 4-5 நிமிடம் மூடி வைத்து காயை வேக வைக்க வேண்டும்.
அடுத்து மிளகு தூள், மிளகாய் தூள், புலாவ் மசாலா மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
மசாலாக்களானது நன்கு ஒன்று சேர்ந்ததும், அதில் சாதத்தைப் போட்டு நன்கு பிரட்டி விட்டு இறக்க வேண்டும்.
இப்போது சூப்பரான கேரட் பீன்ஸ் சாதம் ரெடி!!!



Click it and Unblock the Notifications