Latest Updates
-
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
கேரட் பீன்ஸ் சாதம்
மழைக்காலத்தில் காலை வேளையில் சீக்கிரம் எழுவது என்பது கடினமான ஒன்று. ஏனெனில் மற்ற காலங்களை விட, மழைக்காலத்தில் வானிலையானது இதமாக இருப்பதால், படுக்கையில் இருந்து எழுவதே சிரமமான ஒன்றாக உள்ளது. அதிலும் பள்ளிக்கு செல்லும் குழந்தைக்கு அல்லது வேலைக்கு செல்வோருக்கு, காலை வேளையில் சமைத்துக் கொடுக்க தாமதமாக எழுந்துவிட்டால், அப்போது எளிதில் செய்யக்கூடிய வகையில் கேரட் பீன்ஸ் சாதம் ரெசிபி சரியானதாக இருக்கும்.
மேலும் இந்த ரெசிபி மதிய வேளையிலும் சாப்பிடக்கூடியவாறு அருமையான சுவையில் இருக்கும். இப்போது அந்த கேரட் பீன்ஸ் சாதத்தை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
சாதம் - 2-3 கப்
கேரட் - 4-5 (நீளமாக மற்றும் மெல்லியதாக சீவியது)
பீன்ஸ் - 8-10 (நறுக்கியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
புலாவ் மசாலா - 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்து, வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
பின் இஞ்சி பூண்டு பேஸ்ட், கேரட், பீன்ஸ் மற்றும் குடைமிளகாய் சேர்த்து வதக்கி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, தீயை குறைவில் வைத்து, 4-5 நிமிடம் மூடி வைத்து காயை வேக வைக்க வேண்டும்.
அடுத்து மிளகு தூள், மிளகாய் தூள், புலாவ் மசாலா மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
மசாலாக்களானது நன்கு ஒன்று சேர்ந்ததும், அதில் சாதத்தைப் போட்டு நன்கு பிரட்டி விட்டு இறக்க வேண்டும்.
இப்போது சூப்பரான கேரட் பீன்ஸ் சாதம் ரெடி!!!



Click it and Unblock the Notifications