Latest Updates
-
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
பண்டைய ராஜாக்களும், ராணிகளும் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய பொருட்கள் என்னென்ன தெரியுமா? -
1 பாக்கெட் சேமியாவும், 3 முட்டையும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
வாஸ்து படி உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களை செய்தால் சீக்கிரம் கோடீஸ்வரராகி விடலாம் - ட்ரை பண்ணுங்க -
கோடையில் முகம் எப்பவும் புத்துணர்ச்சியா இருக்கணுமா? அப்ப இந்த தர்பூசணி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சாம்பார் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்: சாம்பாரில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?
ஆந்திரா ஸ்டைல் தக்காளி தால்
இந்தியாவில் தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக ஆந்திரா ரெசிபிக்கள் தான் சுவையாகவும், நன்கு காரமாகவும் இருக்கும். அதிலும் ஆந்திராவில் சட்னி, தால் போன்றவை தான் மிகவும் பிரபலமானவை.
இங்கு அந்த தாலில் ஒன்றான தக்காளி தால் ரெசிபியை எப்படி ஈஸியாக செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதை பேச்சுலர்கள் கூட முயற்சிக்கலாம்.

தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 1 கப்
தக்காளி - 2 (நறுக்கியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
தண்ணீர் - 2 1/2 கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் துவரம் பருப்பை நன்கு கழுவி, நீரில் 15-20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம் சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 30 நொடிகள் நன்கு வதக்கி, பின் தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து 2-3 நிமிடம் குறைவான தீயில் நன்கு வதக்கி விட வேண்டும்.
பிறகு ஊற வைத்துள்ள துவரம் பருப்பை சேர்த்து கிளறி, பின் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி தீயை அதிகரித்து, 7-8 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
விசில் போனதும் குக்கரை திறந்து, அதனை மசித்து, வாணலியில் ஊற்றி அடுப்பில் வைத்து, 1 கப் தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் 5-7 நிமிடம் கொதிக்க விட்டு, உப்பு சுவை பார்த்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், ஆந்திரா ஸ்டைல் தக்காளி தால் ரெடி!!!



Click it and Unblock the Notifications











