Latest Updates
-
முதலைகள் ஏன் கற்களை விரும்பி சாப்பிடுகின்றன தெரியுமா? இதுக்குப் பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா? -
International Yoga day 2026: வாய்வு தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? அப்ப தினமும் இந்த யோசனங்களை செய்யுங்க.. -
சௌ சௌ வாங்குனா இந்த செட்டிநாடு பொரிச்ச குழம்பு செய்யுங்க - சாதம், டிபன் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
ஜூன் 29-ல் நடக்கப்போகும் புதனின் வக்ர பெயர்ச்சியால் செல்வத்தையும், புகழையும் அடையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சாணக்கிய நீதி படி இந்த 4 குணம் உள்ள பெண் அவரது கணவரின் வாழ்க்கையை சொர்க்கமாக மாற்றுவாராம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
கொள்ளு குழிப்பணியாரமும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 16 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணக்கஷ்டம் தேடிவருமாம் - ஜாக்கிரதை -
செவ்வாய் பெயர்ச்சியால் ஜூன் 21 முதல் இந்த 5 ராசிக்கு பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது.. -
ஜூன் 22-ல் நடக்கப்போகும் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான்
ஆந்திரா ஸ்டைல் தக்காளி தால்
இந்தியாவில் தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக ஆந்திரா ரெசிபிக்கள் தான் சுவையாகவும், நன்கு காரமாகவும் இருக்கும். அதிலும் ஆந்திராவில் சட்னி, தால் போன்றவை தான் மிகவும் பிரபலமானவை.
இங்கு அந்த தாலில் ஒன்றான தக்காளி தால் ரெசிபியை எப்படி ஈஸியாக செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதை பேச்சுலர்கள் கூட முயற்சிக்கலாம்.

தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 1 கப்
தக்காளி - 2 (நறுக்கியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
தண்ணீர் - 2 1/2 கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் துவரம் பருப்பை நன்கு கழுவி, நீரில் 15-20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம் சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 30 நொடிகள் நன்கு வதக்கி, பின் தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து 2-3 நிமிடம் குறைவான தீயில் நன்கு வதக்கி விட வேண்டும்.
பிறகு ஊற வைத்துள்ள துவரம் பருப்பை சேர்த்து கிளறி, பின் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி தீயை அதிகரித்து, 7-8 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
விசில் போனதும் குக்கரை திறந்து, அதனை மசித்து, வாணலியில் ஊற்றி அடுப்பில் வைத்து, 1 கப் தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் 5-7 நிமிடம் கொதிக்க விட்டு, உப்பு சுவை பார்த்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், ஆந்திரா ஸ்டைல் தக்காளி தால் ரெடி!!!



Click it and Unblock the Notifications