Latest Updates
-
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சத்தான பீர்க்கங்காய் சாதம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
ஹைதராபாத் முட்டை மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் உச்சமடைவதால் கோடி நன்மைகளை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சன்டே ஸ்பெஷல் - சிக்கன் வாங்குனா இந்த மாதிரி குழிப் பணியாரம் செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்திய ரூபாய் பாகிஸ்தானை விட வலிமையாக இருக்க காரணம் என்ன? -
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம் -
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது!
ஆலு பாலக்
ஆலு பாலக் என்றதும் கஷ்டமான ரெசிபி என்று நினைக்க வேண்டாம். இது வேறு எதுவும் இல்லை, உருளைக்கிழங்கு மற்றும் பசலைக் கீரையை வைத்து செய்யப்படும் ஒருவித கிரேவி தான். அந்த கிரேவி செய்வது என்பது மிகவும் எளிது. அதிலும் இதனை ஆரோக்கியமான முறையில் மதிய வேளையில் சாதத்திற்கு செய்து சாப்பிட்டால், அதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு கிடைப்பதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
சரி, இப்போது அந்த ஆலு பாலக் எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

உருளைக்கிழங்கு - 3 (ஓரளவு நறுக்கியது)
பசலைக் கீரை - 250 கிராம் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
பூண்டு - 4-5 பற்கள் (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
மாங்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 1/3 கப்
செய்முறை:
முதலில் பசலைக் கீரையை தண்ணீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம் மற்றும் பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
அடுத்து நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு 2 நிமிடம் வதக்க வேண்டும். பின் நறுக்கி கழுவி வைத்துள்ள பசலைக் கீரையை போட்டு கிளற வேண்டும்.
பின்பு பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, நன்கு பிரட்ட வேண்டும்.
பிறகு உப்பு, மஞ்சள் தூள் போட்டு, 2 நிமிடம் கிளற வேண்டும்.
இப்போது நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கி, மிளகாய் தூள், மல்லி தூள் போட்டு நன்கு வதக்க வேண்டும்.
அனைத்து பொருட்களும் நன்கு ஒன்று சேர்ந்ததும், அதில் கிரேவிக்கு தேவையான தண்ணீர் ஊற்ற வேண்டும்.
பின் குக்கரை மூடி, 2 விசில் விட்டு இறக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து விசில் போனதும், திறந்து அதன் மேல் மாங்காய் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும்.
இப்போது சுவையான ஆலு பாலக் ரெடி!!! இதனை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications