Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் ஆரோக்கியமான உளுந்து சட்னி... செஞ்சு பாருங்க இரும்பு எலும்பு மாறி மாறும்!
Ulundu Chutney Recipe in Tamil: எலும்பை இரும்பு போல் பலம் பெற செய்வதில் உளுந்து முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் இருக்கும் கால்சியம் மற்றும் மெக்னிசியம் முதுகு எலும்பை பலப்படுத்துவதால் பெண்களுக்கு ஏற்படும் முதுகு வலி பிரச்சனைக்கு நல்ல தீர்வை தரக் கூடியது. இதில் இருக்கும் இரும்பு சத்து இரத்த சோகையை விரட்டுவதில் முக்கியத்துவம் பெறுகிறது.
மேலும் இது செரிமான பிரச்சனைகளை சரி செய்கிறது. இது வயது வந்த பெண் குழந்தைகள் மற்றும் கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு தேவையான ஃபோலிக் ஆசிடையும் கொண்டிருக்கிறது. இவ்வளவு பயன்களை கொண்டிருக்கும் உளுந்தை வைத்து எப்படி சுவையாய் சட்னி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
- உளுத்தம் பருப்பு - ¼ கப்
- பச்சை மிளகாய் - 5
- தேங்காய் - ½ மூடி (சிறியது)
- சின்ன வெங்காயம் - 6
- புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
- பூண்டு - 5
- கறிவேப்பிலை - 1 கொத்து
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
தாளிக்க:
- எண்ணெய் - தேவையான அளவு
- கடுகு - ½ டீ ஸ்பூன்
- கடலை பருப்பு - ½ டீஸ்பூன்
- உளுந்து பருப்பு - ½ டீஸ்பூன்
- பெருங்காயம் - ஒரு சிட்டிகை
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை:
- தேங்காயை துருவியோ அல்லது நறுக்கியோ வைத்து கொள்ளவும்.
- பூண்டு மற்றும் வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் தேவையான அளவு எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் உளுந்தம் பருப்பு சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- மிதமான தீயில் உளுந்து கருகி விடாமல் நன்றாக வறுக்கப்பட வேண்டியது அவசியம்.
- வெங்காயம், பூண்டு, மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வறுக்கவும். அதனுடன் கருவேப்பிலை மற்றும் புளி சேர்த்து நன்கு வறுக்கவும்.
- கடைசியாக துருவிய அல்லது நறுக்கிய தேங்காய் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.
- அதை வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி நன்கு ஆற விடவும். நன்றாக ஆறியதும் மிக்ஸி ஜாருக்கு மாற்றவும்.
- அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- மீண்டும் வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் தாளிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிய விடவும்.
- கடுகு பொரிந்ததும் கடலைப் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பின் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- கடைசியாக பெருங்காயம் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.
- அரைத்து வைத்த சட்னி உடன் தாளிப்பை சேர்த்து நன்கு கிளறினால் இட்லி தோசைக்கு சுவையான உளுந்து சட்னி ரெடி!



Click it and Unblock the Notifications











