Latest Updates
-
சிக்கன் எடுத்தா.. இப்படி மசாலா அரைச்சு கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 05 ஜூலை 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கதவை தட்டப்போகுதாம் -
சுக்கிரன் சூரியன் ஆளும் ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 5 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா தஞ்சாவூர் கொத்சு செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வார ராசிபலன் (05 July 2026-11 July 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்ணை திருமணம் செய்யும் ஆண்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
நெல்லை ஸ்டைல் தேங்காய்ப்பால் கோழி குழம்பு ரெசிபி - இந்த மாதிரி வைச்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
200 ஆண்டுகளுக்கு மேல் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆள்வதற்கு காரணமாக இருந்தது இந்த 5 விஷயங்கள்தான் -
ஐயங்கார் ஸ்டைல் புடலங்காய் பால் கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
செவ்வாய் ரோகிணி நட்சத்திரத்திற்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
திருச்சி ஸ்டைல் சாம்பார் எப்படி செய்வதென்று தெரியுமா?
மதியம் சாதத்திற்கு எந்த சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? ஒரு அட்டகாசமான சுவையைக் கொண்ட சாம்பார் செய்ய நினைக்கிறீர்களா? அப்படி திருச்சி ஸ்டைல் சாம்பார் செய்யுங்கள்.
மதியம் சாதத்திற்கு எந்த சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? ஒரு அட்டகாசமான சுவையைக் கொண்ட சாம்பார் செய்ய நினைக்கிறீர்களா? அப்படி திருச்சி ஸ்டைல் சாம்பார் செய்யுங்கள். இந்த சாம்பார் நாம் வழக்கமாக செய்யும் சாம்பாரை விட சற்று வித்தியாசமானது. என்ன வித்தியாசம் என்றால் இந்த சாம்பாரில் தேங்காய் அரைத்து ஊற்றி செய்ய வேண்டும். இந்த தேங்காய் சாம்பார் சாதத்திற்கு மட்டுமின்றி, இட்லி, தோசைக்கும் அட்டகாசமாக இருக்கும். மேலும் இது பேச்சுலர்களும் செய்யும் வகையில் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு திருச்சி ஸ்டைல் சாம்பார் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே திருச்சி ஸ்டைல் சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* துவரம் பருப்பு - 1 கப்
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பெரிய தக்காளி - 1 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* சிறிய கேரட் - 1
* கத்திரிக்காய் - 2
* முருங்கைக்காய் -1
* உருளைக்கிழங்கு - 1
* புளி - 1 எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்தது)
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
அரைப்பதற்கு...
* தேங்காய் - 1 கப்
* வரமிளகாய் - 5
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 5
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - சிறிது
* வரமிளகாய் - 1
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் துவரம் பருப்பை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் கேரட், உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், முருங்கைக்காய் ஆகியவற்றை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் தேங்காய், வரமிளகாய், சீரகம் சேர்த்து நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் சின்ன வெங்காயத்தைப் போட்டு, லேசாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கழுவிய துவரம் பருப்பை போட்டு, 2 கப் நீரை ஊற்றி, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், வெங்காயம், தக்காளி சேர்த்து, குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் காய்கறிகள், அரைத்த தேங்காய் விழுது, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி, மீண்டும் அடுப்பில் வைத்து 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் புளிச்சாற்றினை ஊற்றி அடுப்பில் வைத்து ஒருகொதி விட்டு இறக்க வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள், வரமிளகாய் சேர்த்து தாளித்து, குக்கரில் உள்ள சாம்பாருடன் ஊற்றி கிளறி, மேலே சிறிது கொத்தமல்லியைத் தூவினால், சுவையான திருச்சி ஸ்டைல் சாம்பார் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
