Just In
- 1 hr ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 3 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 4 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 4 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
துவரம் பருப்பு உருண்டை
தினமும் வடை, பஜ்ஜி போன்றவற்றை செய்வதற்கு பதிலாக, கோஃப்தா என்னும் உருண்டையை செய்து சாப்பிட்டால் இன்னும் சூப்பராக இருக்கும். அதுவும் துவரம் பருப்பு உருண்டை செய்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.
மழைக்காலத்தில் மாலை வேளையில் நன்கு சூடாகவும், காரமாகவும் ஏதாவது சாப்பிடத் தோன்றும். ஆனால் வழக்கமாக செய்யும் வடை, பஜ்ஜி, போண்டா போன்றவற்றை செய்வதற்கு பதிலாக, கோஃப்தா என்னும் உருண்டையை செய்து சாப்பிட்டால் இன்னும் சூப்பராக இருக்கும். அதுவும் துவரம் பருப்பு உருண்டை செய்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.
உங்களுக்கு துவரம் பருப்பு உருண்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே துவரம் பருப்பு உருண்டையின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* துவரம் பருப்பு - 1 கப் (4 மணிநேரம் நீரில் ஊற வைத்தது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 6 பல்
* கறிவேப்பிலை - ஒரு கையளவு
* கொத்தமல்லி - ஒரு கையளவு
* பட்டை - 1 இன்ச்
* சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* அரிசி மாவு - 1/2 கப்
* கடலை மாவு - 1/2 கப்
* பேக்கிங் பவுடர் - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஊற வைத்துள்ள துவரம் பருப்பை மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் அரைத்த துவரம் பருப்பை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே மிக்சர் ஜாரில் எண்ணெய் மற்றும் மாவுகளைத் தவிர, மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து ஒருமுறை அரைத்து, பாத்திரத்தில் உள்ள துவரம் பருப்புடன் சேர்த்து நன்கு பிசைய வேண்டும்.
* பிறகு அதில் அரிசி மாவு மற்றும் கடலை மாவை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், துவரம் பருப்பு கோஃப்தா/உருண்டை தயார்.
Image Courtesy: yummytummyaarthi