Latest Updates
-
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்..
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த பொருளை சேர்த்து அரைங்க... இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்...!
Tomato Chutney Recipe in Tamil: பெரும்பாலான தமிழ்நாட்டு வீடுகளில் காலை அல்லது இரவு உணவென்றால் அது எப்போதும் இட்லி அல்லது தோசைதான். இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷ் என்றால் அது எப்போதுமே சட்னிதான். பொதுவாக இட்லி, தோசைக்கு அனைவருக்கும் பிடித்த சட்னி என்றால் அது தேங்காய் சட்னிதான். ஆனால் தேங்காய் சட்னியுடன் தக்காளி சட்னியை சேர்த்து சாப்பிடும்போது அதனால் கிடைக்கும் அனுபவமே தனி. காலைப்பொழுதை மகிழ்ச்சியாகத் தொடங்க இதுவே சிறந்த வழி.
தக்காளி சட்னியை பொதுவாக ஒரே மாதிரிதான் அரைப்போம். தக்காளி சட்னியின் பொதுவான மூலப்பொருள் தக்காளியாக இருந்தாலும், அதனுடன் பூண்டு, வெங்காயம் போன்றவற்றை சேர்த்து செய்யும் போதுதான் முழுமையான சுவை கிடைக்கும். ஆனால் தக்காளி சட்னி அரைக்கும் போது அதனுடன் இரு குறிப்பிட்ட பொருளை சேர்த்து அரைத்தால் அதன் சுவை வித்தியாசமாகவும், தனித்துவமானதாகவும் இருக்கும். இந்த பதிவில் ஸ்பெஷலான தக்காளி சட்னியை எப்படி அரைக்கலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- நன்கு பழுத்த தக்காளி - 4
- பச்சை மிளகாய் - 5
- எள் - 1 ஸ்பூன்
- பூண்டு - 4 பல்
- மல்லி விதை - 1 ஸ்பூன்
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- உப்பு தேவையான அளவு
தாளிக்க:
- கடுகு - அரை ஸ்பூன்
- கறிவேப்பிலை ஒரு கொத்து
- உளுந்தம் பருப்பு - அரை ஸ்பூன்
- சீரகம் - கால் ஸ்பூன்
- பெருங்காயம் 1 சிட்டிகை
செய்முறை:
- ஒரு கடாயில் 1 ஸ்பூன் எண்ணெயை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் கொத்தமல்லி விதை, சீரகம், இறுதியாக எள் சேர்த்து, அவை வெடிக்கும் வரை வறுக்கவும். இதை ஆறவைத்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
- பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, பச்சை மிளகாய் சேர்த்து மென்மையாகும் வரை வதக்கவும். பின்னர் தக்காளியை நறுக்கி அதில் போட்டு வதக்கவும்.
- தக்காளி முழுவதுமாக வதங்கி மென்மையான பேஸ்டாக மாறும் வரை வதக்க வேண்டும். பின்னர் எள் பொடி, பூண்டு மற்றும் உப்பு சேர்த்து மென்மையான சட்னியாக அரைக்கவும்.
- சட்னியை தாளிக்க அதே கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொரியும் வரை தாளிக்கவும்.
- அதன்பின் உளுந்தம்பருப்பு மற்றும் சீரகம் மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளித்து சட்னி மீது ஊற்றவும்.
- இந்த சட்னி மூன்று நாட்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும்.
- இட்லி, தோசைக்கு இந்த சட்னி அட்டகாசமான சைடிஷாக இருக்கும்.



Click it and Unblock the Notifications