Latest Updates
-
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
சளி, இருமலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கணுமா? இந்த தூதுவளை ரசத்தை செஞ்சு சாப்பிடுங்க..
Thuthuvalai Rasam Recipe In Tamil: மழைக்காலம் என்பதால் நிறைய பேர் சளி, இருமல் பிரச்சனையால் அவதிப்பட்டு கொண்டிருப்பார்கள். உங்கள் வீட்டிலும் யாரேனும் சளி, இருமலால் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்களா? அப்படியானால் அவர்களுக்கு ஒரு கைப்பிடி தூதுவளை இலையைக் கொண்டு ரசம் செய்து கொடுங்கள்.
இந்த தூதுவளை ரசமானது சளி, இருமலில் இருந்து நல்ல நிவாரணம் அளிக்கும். மேலும் இந்த ரசம் நல்ல ருசியுடனும் இருக்கும். இந்த ரசத்தை அடிக்கடி செய்து சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

உங்களுக்கு தூதுவளை ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தூதுவளை ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* புளி - சிறுகோலி குண்டு அளவு
* தக்காளி - 2
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
பொடி செய்வதற்கு...
* சீரகம் - 1 டீ1பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* துவரம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 7-8 பல்
* தூதுவளை இலை - 1 கைப்பிடி
தாளிப்பதற்கு...
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை எடுத்து, அதில் புளியை சேர்த்து
ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் தக்காளியை அரைத்து சேர்த்து, புளியைக் கரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் சீரகம், மிளகு, வரமிளகாய், மல்லி, துவரம்
பருப்பு, பூண்டு ஆகியவற்றை சேர்த்து பொடித்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் தூதுவளை இலையை சேர்த்து நீர் சேர்க்காமல் அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்ததை கரைத்து வைத்துள்ள புளிச்சாற்றுடன் சேர்த்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய்யை ஊற்றி
சூடானதும், கடுகு, வரமிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து,
கரைத்து வைத்துள்ளதை ஊற்றி, நுரைக்கட்ட தொடங்கும் போது அடுப்பை
அணைத்துவிட வேண்டும்.
* இறுதியாக ஒரு பாத்திரத்தில் கொத்தமல்லியை போட்டு, அதில் ரசத்தை
ஊற்றி சிறிது நேரம் மூடி வைத்தால், சுவையான தூதுவளை ரசம் தயார்.



Click it and Unblock the Notifications











