Latest Updates
-
செவ்வாய்-புதன் சேர்க்கையால் உருவாகியுள்ள தன யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
குரு-சுக்கிரன் உருவாக்கும் கஜலக்ஷ்மி யோகத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உள்ளங்கையில் இந்த 'ராஜலட்சுமி யோகம்' இருப்பவர்கள் கோடீஸ்வரராக பிறந்தவர்களாம் - உங்க கையில் இருக்கா? -
விளக்கெண்ணெயுடன் இந்த 5 எண்ணெயை கலந்து யூஸ் பண்ணுங்க.. தலைமுடி 2 மடங்கு வேகத்துல வளரும்.. -
ஆந்திரா கறிவேப்பிலை சட்னி ரெசிபி - அரைச்சு பாருங்க, இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும் -
பதவியேற்பு விழாவில் விஜய்யின் குடும்பம் ஏன் வரவில்லை? அந்த ஒரு விஷயம் தான் இப்போ ஹாட் டாபிக்! -
சப்பாத்திக்கு இந்த பக்குவத்துல கருப்பு கொண்டைக்கடலை கிரேவி செய்யுங்க.. 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ஒழுக்கமானவர்களாக இருப்பார்களாம் - வெற்றி இவர்களை தேடிவருமாம் -
விஜய் சிஎம் ஆனதும் த்ரிஷா போட்ட அந்த ஒரு போஸ்ட்: இணையத்தில் வெடிக்கும் புதிய சர்ச்சை! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகமா வழியுதா? அப்ப மைசூர் பருப்பு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
தட்டுக்கடை முட்டை பிரியாணி செய்வது எப்படி தெரியுமா?
உங்கள் வீட்டில் பாசுமதி அரிசி மற்றும் முட்டை உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு சுவையான தட்டுக்கடை முட்டை பிரியாணியை செய்து சாப்பிடுங்கள். இந்த தட்டுக்கடை முட்டை பிரியாணி செய்வது மிகவும் சுலபம்.
தினமும் சாதத்திற்கு சாம்பார், புளிக்குழம்பு செய்து போரடித்துவிட்டதா? அதிகம் சிரமப்படாமல், அதே சமயம் ஒரு சுவையான சமையலை மதியம் சாப்பிட விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் பாசுமதி அரிசி மற்றும் முட்டை உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு சுவையான தட்டுக்கடை முட்டை பிரியாணியை செய்து சாப்பிடுங்கள். இந்த தட்டுக்கடை முட்டை பிரியாணி செய்வது மிகவும் சுலபம். வீட்டில் காய்கறிகள் இல்லாத சமயத்தில் இந்த பிரியாணியை செய்து சாப்பிடலாம். முக்கியமாக இது பேச்சுலர்களுக்கான ரெசிபி என்றே கூறலாம்.

உங்களுக்கு தட்டுக்கடை முட்டை பிரியாணியை எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தட்டுக்கடை முட்டை பிரியாணி ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* முட்டை - 3 (வேக வைத்தது)
* பாசுமதி அரிசி - 1 கப் (வேக வைத்தது)
* பெரிய வெங்காயம் - 1 (நீளமாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* தயிர் - 1/2 கப்
* புதினா - 1/4 கப் (நறுக்கியது)
* கொத்தமல்லி - 1/4 கப் (நறுக்கியது)
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 2 டீஸ்பூன்
* எலுமிச்சை சாறு - சுவைக்கேற்ப
* உப்பு - சுவைக்கேற்ப
மசாலா பொருட்கள்...
* பிரியாணி இலை - 1
* மிளகு - 1 டீஸ்பூன்
* கிராம்பு - 5
* ஏலக்காய் - 3
* பட்டை - 1 சிறிய துண்டு
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு கப் பாசுமதி அரிசியை நீரில் 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் முட்டைகளை நீரில் போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். முட்டை வெந்ததும், அதன் ஓட்டை நீக்கிவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* 30 நிமிடம் கழித்து, அரிசியை கழுவி, குக்கரில் போட்டு, அதில் 1 1/2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 1-2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து, பாசுமதி அரிசி சாதத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வேக வைத்த முட்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரிக்க வேண்டும். பின் அதில் மசாலா பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளி, கொத்தமல்லி, புதினா மற்றும் தயிரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் வேக வைத்துள்ள பாசுமதி அரிசியைப் போட்டு நன்கு கிளறி விட்டு, மேலே எலுமிச்சை சாற்றினைப் பிழிந்து, சிறிது கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், தட்டுக்கடை முட்டை பிரியாணி தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications











