Latest Updates
-
சிக்கன் எடுத்தா.. இப்படி மசாலா அரைச்சு கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 05 ஜூலை 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கதவை தட்டப்போகுதாம் -
சுக்கிரன் சூரியன் ஆளும் ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 5 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா தஞ்சாவூர் கொத்சு செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வார ராசிபலன் (05 July 2026-11 July 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்ணை திருமணம் செய்யும் ஆண்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
நெல்லை ஸ்டைல் தேங்காய்ப்பால் கோழி குழம்பு ரெசிபி - இந்த மாதிரி வைச்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
200 ஆண்டுகளுக்கு மேல் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆள்வதற்கு காரணமாக இருந்தது இந்த 5 விஷயங்கள்தான் -
ஐயங்கார் ஸ்டைல் புடலங்காய் பால் கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
செவ்வாய் ரோகிணி நட்சத்திரத்திற்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
தஞ்சாவூர் ரோசாப்பூ கார சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க
Thanjavur Rosapoo Chutney Recipe in Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசைக்கு எப்போதும் ஒரே மாதிரியான சட்னி செய்து அலுத்துவிட்டதா? சமைக்கும் உங்களுக்கே அலுத்துப் போகும் போது, சாப்பிடுபவர்களுக்கு எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள். எனவே உங்கள் வீட்டில் இருப்போருக்கு வாய்க்கு ருசியாக ஒரு அட்டகாசமான மற்றும் சற்று காரமான, கண்ணைக் கவரும் சட்னியை செய்து கொடுக்க நினைக்கிறீர்களா?
அப்படியானால் கண்ணைக் கவரும் நிறத்தில் அட்டகாமான சுவையில் தஞ்சாவூர் ஸ்பெஷல் ரோசாப்பூ மிளகாய் சட்னியை செய்யுங்கள். இந்த ரோசாப்பூ சட்னி என்பது அதன் சுவையால் அல்ல மாறாக அதன் நிறத்தால் ரோசாப்பூ சட்னி என்று அழைக்கப்படுகிறது. இந்த சட்னி சுவையாக இருப்பதுடன் 4 நாட்களுக்கு மேல் கெட்டுப்போகாமல் இருக்கும்.

உங்களுக்கு தஞ்சாவூர் ஸ்பெஷல் ரோசாப்பூ சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தஞ்சாவூர் ஸ்பெஷல் ரோசாப்பூ சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- சின்ன வெங்காயம் - 10
- வர மிளகாய் - 5
- காஷ்மீரி மிளகாய் - 4
- புளி - சிறிதளவு
- சிறிய தக்காளி - 1
- உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
- கடுகு - 1 ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்
- நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை:
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும், பின் அதில் நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின்னர் வர மிளகாய் மற்றும் காஷ்மீர் மிளகாயைச் சேர்க்கவும். வெங்காயம் வதங்கிய பின்னரே மிளகாயைச் சேர்க்க வேண்டும், அப்போதுதா இந்த சட்னியின் கவர்ச்சிகரமான சிவப்பு நிறம் கிடைக்கும்.
- பின்னர் தக்காளி மற்றும் புளியைச் சேர்த்து, தக்காளி குழைந்துபோகும் வரை நன்றாக வதக்கவும்.
- பின்னர் அடுப்பை அணைத்து ஆற வைக்கவும். நன்கு ஆறியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்சி ஜாரில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- சட்னியை தாளிக்க ஒரு கடாயில் நல்லெண்ணெயைச் சூடாக்கி, கடுகு மற்றும் உளுத்தம்பருப்பைப் பொரியவிட்டு, கறிவேப்பிலையைச் சேர்க்கவும்.
- பின்னர் அரைத்து வைத்துள்ள சட்னியை சேர்த்து 5 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும்.
- சட்னி நன்கு சுருங்கி வந்தவுடன் அடுப்பை அணைத்தால் சூப்பரான தஞ்சாவூர் ரோசாப்பூ சட்னி ரெடி!



Click it and Unblock the Notifications