Latest Updates
-
சனிபகவான் திரிகிரக யோகத்தின் போது நட்சத்திரத்தை மாற்றுவதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் -
கிட்னியை பாதுகாக்கும் சத்தான வாழைத்தண்டு தோசை ரெசிபி - செஞ்சு பாருங்க, ஆரோக்கியத்துக்கு ரொம்ப நல்லது -
வரதட்சணை கொடுமை: திருமணமான 7 ஆண்டுகளில் நடக்கும் மரணங்கள்! உங்கள் மகளைக் காக்க இந்த சட்டங்கள் தெரியுமா? -
இந்தியா-லண்டன் வரை 11 நாடுகள் வழியாக சென்ற உலகின் நீண்ட பயணத்தின் டிக்கெட் கட்டணம் எவ்வளவு தெரியுமா? -
சுக்கிரன் ராகுவின் நட்சத்திரம் செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் -
வரதட்சணை கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கணுமா? புதிய சட்டங்கள் மற்றும் குடும்பத்தினர் செய்ய வேண்டிய மிக முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கைகள் இதோ! -
மாவிளக்கு மாவு ரொம்ப மிச்சமாகிருச்சா? அதை வைச்சு இந்த மாதிரி பலகாரம் பண்ணுங்க - சூப்பரா இருக்கும் -
ஸ்ரீரங்கம் ஸ்பெஷல் அரைச்சுவிட்ட வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அமிர்தமா இருக்கும் -
வெயில் கொடுமையா? வீட்டை ஜில்லுனு வச்சுக்க இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், பணமும் தேடி வரும்! -
சாணக்கிய நீதி படி திருமணமான ஆண் பிற பெண்கள் மீது ஆசை கொள்வதற்கு இந்த 5 விஷயங்களில் ஒன்றுதான் காரணமாம்
தஞ்சாவூர் ரோசாப்பூ கார சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க
Thanjavur Rosapoo Chutney Recipe in Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசைக்கு எப்போதும் ஒரே மாதிரியான சட்னி செய்து அலுத்துவிட்டதா? சமைக்கும் உங்களுக்கே அலுத்துப் போகும் போது, சாப்பிடுபவர்களுக்கு எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள். எனவே உங்கள் வீட்டில் இருப்போருக்கு வாய்க்கு ருசியாக ஒரு அட்டகாசமான மற்றும் சற்று காரமான, கண்ணைக் கவரும் சட்னியை செய்து கொடுக்க நினைக்கிறீர்களா?
அப்படியானால் கண்ணைக் கவரும் நிறத்தில் அட்டகாமான சுவையில் தஞ்சாவூர் ஸ்பெஷல் ரோசாப்பூ மிளகாய் சட்னியை செய்யுங்கள். இந்த ரோசாப்பூ சட்னி என்பது அதன் சுவையால் அல்ல மாறாக அதன் நிறத்தால் ரோசாப்பூ சட்னி என்று அழைக்கப்படுகிறது. இந்த சட்னி சுவையாக இருப்பதுடன் 4 நாட்களுக்கு மேல் கெட்டுப்போகாமல் இருக்கும்.

உங்களுக்கு தஞ்சாவூர் ஸ்பெஷல் ரோசாப்பூ சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தஞ்சாவூர் ஸ்பெஷல் ரோசாப்பூ சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- சின்ன வெங்காயம் - 10
- வர மிளகாய் - 5
- காஷ்மீரி மிளகாய் - 4
- புளி - சிறிதளவு
- சிறிய தக்காளி - 1
- உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
- கடுகு - 1 ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்
- நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை:
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும், பின் அதில் நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின்னர் வர மிளகாய் மற்றும் காஷ்மீர் மிளகாயைச் சேர்க்கவும். வெங்காயம் வதங்கிய பின்னரே மிளகாயைச் சேர்க்க வேண்டும், அப்போதுதா இந்த சட்னியின் கவர்ச்சிகரமான சிவப்பு நிறம் கிடைக்கும்.
- பின்னர் தக்காளி மற்றும் புளியைச் சேர்த்து, தக்காளி குழைந்துபோகும் வரை நன்றாக வதக்கவும்.
- பின்னர் அடுப்பை அணைத்து ஆற வைக்கவும். நன்கு ஆறியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்சி ஜாரில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- சட்னியை தாளிக்க ஒரு கடாயில் நல்லெண்ணெயைச் சூடாக்கி, கடுகு மற்றும் உளுத்தம்பருப்பைப் பொரியவிட்டு, கறிவேப்பிலையைச் சேர்க்கவும்.
- பின்னர் அரைத்து வைத்துள்ள சட்னியை சேர்த்து 5 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும்.
- சட்னி நன்கு சுருங்கி வந்தவுடன் அடுப்பை அணைத்தால் சூப்பரான தஞ்சாவூர் ரோசாப்பூ சட்னி ரெடி!



Click it and Unblock the Notifications











