Latest Updates
-
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
தஞ்சாவூர் கார அடை ரெசிபி... இட்லி, தோசையை விட சூப்பரா இருக்கும் இந்த டிபன செஞ்சு எல்லாரையும் அசத்துங்க...!
Thanjavur Adai Dosa Recipe in Tamil: தமிழ்நாடு சுவையான உணவுகளுக்கு பெயர் பெற்றது. மதுரை, காரைக்குடி போன்ற இடங்கள் உணவுக்கு பிரசித்தி பெற்றவையாக இருந்தாலும், ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் பிரசித்தி பெற்ற சில உணவுகள் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் தஞ்சாவூரின் பல புகழ்பெற்ற உணவுகளில் கார தோசை அல்லது ஒரப்பு அடை மிகவும் பிரபலமானதாகும்.
தினமும் இட்லி, தோசை போன்ற உணவுகளையே சாப்பிட்டு சலித்துப் போனவர்களுக்கு இந்த ஒரப்பு அடை வித்தியாசமானதாக சுவையில் மிகவும் அருமையாக இருக்கும். இந்த அடையை காலை அல்லது இரவு உணவாகவும் சாப்பிடலாம் அல்லது மாலை நேர சிற்றுண்டியாகவும் சாப்பிடலாம். இதில் கூடுதல் சிறப்பு இதற்கு சைடிஷ் எதுவுமே தேவையில்லை அப்படியே சாப்பிடலாம். இந்த பதிவில் சூப்பரான தஞ்சை ஸ்பெஷல் ஒரப்பு அடையை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- இட்லி அரிசி - 1 கப்
- பச்சரிசி - 1 கப்
- கடலைப்பருப்பு - 1 கப்
- துவரம் பருப்பு - 1 கப்
- உளுந்தம் பருப்பு - 1 கப்
- நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப்
- வர மிளகாய் - 8
- சோம்பு - 1ஸ்பூன்
- துருவிய சுரைக்காய் - கால் கப்
- துருவிய தேங்காய் - கால் கப்
- மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
- பெருங்காயத்தூள் - அரை ஸ்பூன்
- உப்பு தேவைக்கேற்ற
- நல்லெண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை:
- ஒரு கப் இட்லி அரிசி, ஒரு கப் பச்சரிசி, ஒரு கப் துவரம் பருப்பு, ஒரு கப் கடலை பருப்பு, ஒரு கப் உளுந்து பருப்பு சேர்த்து ஐந்து மணி நேரம் ஊற வைக்கவும்.
- இவை நன்கு ஊறியதும் காய்ந்த மிளகாய், ஒரு ஸ்பூன் சோம்பு, தேவையான அளவு உப்பு சேர்த்து கொரகொரப்பாக தோசை மாவு போலல்லாமல் கொஞ்சம் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
- பின், அரைத்த மாவுடன், அரை கப் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், 1/4 கப் துருவிய சுரைக்காய், 1/4 கப் துருவிய தேங்காய், அரை ஸ்பூன் பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, 1 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விட்டு ஒரு மணி நேரம் வைக்கவும்.
- பின்னர் தோசைக்கல்லில் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், தயார் செய்து வைத்துள்ள மாவை நீங்கள் விரும்பிய வடிவில் மெலிதாகவோ அல்லது கெட்டியாகவோ கல்லில் ஊற்றி வேக வைக்கவும்.
- அடை இரண்டு பக்கமும் நன்கு வெந்ததும் தட்டிற்கு மாற்றி சூடாக சாப்பிடவும்.நீங்கள் விரும்பினால் கெட்டியான தேங்காய் சட்னி இதற்கு சூப்பரான சைடிஷாக இருக்கும். அதனுடன் வைத்து சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications